கான்கிரீட்டில் அரிப்பா கவலையை விடுங்க...


கான்கிரீட்டில் விரிசல் என்பது போலவே அரிப்பு என்பதும் பெரும் தொல்லை. ஆனால் அதற்கு தற்போது  ஜென்ட்ரிஃபிக்ஸ் என்னும் வேதியியல் தயாரிப்பு வந்துவிட்டது.கான்கிரீட்டை வலுவிழக்கச் செய்வதில் தீவிரமாகச் செயல்
படுவது அரிப்பு. வேதிப்பொருட்களால் ஏற்படும் துரு, அரிப்பு, வலுவிழப்பு ஆகிய தொல்லைகளை அறவே ஒழிப்பதற்கு ஜென்ட்ரிஃபிக்ஸ் வந்துவிட்டது.

இது தாது அடிப்படையிலான ஒரு சேர்மானப் பொருள். அரிப்பைத் தடுக்கவும், தவிர்க்கவும் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
பழைய கட்டுமானங்களைப் பழுதுபார்க்கும் தேவைகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதனை வேறு எந்தவிதக் கரைப்பான்களுடனும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியது இல்லை.

எப்படிச் செயல்படுத்துவது?

ஜென்ட்ரிஃபிக்ஸ் கொண்டு அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ள முடிவு செய்து விட்டீர்கள் என்போம்.  பாதுகாப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியை முதலில் ஈரமாக்க வேண்டும். ஈரமாக  இருக்க வேண்டும் என்றுதான் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.
ஜென்ட்ரிஃபிக்ஸை அப்படியே தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டியதுதான். தண்ணீருடன் கலக்கும் வேலையைச் செய்யும் நேரத்தில் தொடர்ச்சியாகக் கலக்கிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சீரான கூழ் போன்ற பக்குவத்தில் தயாரிக்க வேண்டும். கட்டிகள்  தேங்கக் கூடாது. கரைப்பு வேலையைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.இது ஐந்து நிமிடத்திற்குள் முடிந்து விடக் கூடிய வேலைதான். அலட்சியம் காட்டாமல் மேற்கொள்ள வேண்டும். மெதுவாகச் சுழன்று கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

என்ன விகிதத்தில் கலப்பது?

கலக்கப்படும் கலவை எந்த அளவு பக்குவத்தில் அமைய வேண்டும் என்பதற்கேற்ப பொறுமையாகக் கலக்கிக் கொண்டு வர வேண்டும். அதிகமாக நீர்த்துப் போகவும் விடக் கூடாது. ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பரப்புவது எப்படி?

பெயின்ட் அடிப்பதைப் போல் அடிக்க வேண்டியதுதான். இதற்குப் பொருத்தமான பிரஷை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புக் கம்பிகளின் மேல் அவற்றின் உடற்பகுதியை நன்கு மூடும்படி கலவையைப் பூச வேண்டும். இவ்வாறு இரண்டு கோட் அடிப்பது அவசியம். கம்பிகள் குறுக்கும் நெடுக்கமாக அடுக்கப்பட்டுக் கட்டுக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருப்பது வழக்கம். கலவையைக் கம்பிகளின் மேல் பூசும்போது இந்தக் கட்டுக் கம்பிகளின் மேலும் கலவை பூசப்படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இது அரிப்பை அண்டவிடாமல் செய்வதற்கான கவசத்தை அணிவிப்பது போன்ற வேலை. தவிரவும், இணைப்புகளை மேலும்
உறுதியாக்கவும் உதவும். இந்தத் தேவைகளுக்காகவே ஜென்ட்ரிஃபிக்ஸ் பூசப்படுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வேலைகளைச் செய்ய வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் பிரஷ்கள் விசயத்திலும் கவனமாக இருங்கள். குச்சங்கள் குட்டையானவையாக அமைக்கப்பட் டிருக்கும் பிரஷ்களையே பயன்படுத்துங்கள்.முதலில் ஒரு கோட் அடித்து முடித்த பிறகு இரண்டாவதாக இன்னொரு கோட் அடியுங்கள். முதல் கோட் பாதுகாப்பதற்கு. இரண்டாவது கோட் பழுதுபார்க்கும் வேலைகளுக்காக.
ஜெர்மானிய தொழிற்நுட்ப ஒத்துழைப்போடு ஜென்ட்ரி ஃபிக்ஸை மெக் பாக்கெமி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து அளிக்கிறது.

கான்கிரீட் தரைகளை காக்கும் ரெட்ரோ பிளேட்-REDRO PLATE


கான்கிரீட் தரைகள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட வேண்டுமா?
ஏற்கனவே போடப்பட்ட கான்கிரீட் தரையை மாற்றி  அமைக்க வேண்டிய தேவை வரக்கூடாதா?அடிக்கடி கான்கிரீட் தரையைப் பராமரிப்பு வேலைகளுக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறதா?
ஒரே மாதிரியான கான்கிரீட் தரையை நீண்ட காலம் பார்த்துக் கொண்டிருப்பதால் சலிப்பு ஏற்படுகிறதா?
உங்கள் அத்தனை சிக்கல்களையும் தீர்க்க வந்துவிட்டது ரெட்ரோ பிளேட் 99.  இது என்ன என்று புரியவில்லையா? புதிய கான்கிரீட் தரையாக இருந்தாலும் சரி..பழைய கான்கிரீட் தரை என்றாலும் சரி. ரெட்ரோ பிளேட் 99, பளபளப்பான கான்கிரீட் பரப்பை உருவாக்கிக் கொடுக்கும். நீங்கள் இதுகாறும் அனுபவித்து வந்த தொல்லைகள் எதுவும் இருக்காது.

எப்படி வேலை செய்கிறது?

ரெட்ரோ பிளேட் 99இல் இடம்பெற்றுள்ள வேதிப் பொருட்கள் ஈரத்தன்மையை நீண்ட காலம் நிலைநிறுத்துகின்றன. இதனால் கான்கிரீட் கலவையைக் குலுக்கிவிடுவதற்கான தேவை குறையும். கான்கிரீட் பரப்பில் ஈரம் நிலைநிறுத்தப்படுவதால் கட்டுமானக் கலவை நன்றாக உள்ளிழுக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
ஆவியாவதால் ஏற்படும் இழப்பு குறைக்கப்படுகிறது. தரைப்பரப்பு எந்த அளவுக்கு பளபளப்புக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கேற்ற வகையில் தேய்த்துப் பளபளப்பாக்கும் உத்திகளைப் பின்பற்றலாம்.தரையின் தேய்
மானத்தைக் கட்டுப்படுத்தலாம். உராய்வுகளால் ஏற்படும் சேதத்தை எதிர்க்கும் திறனை நான்கு மடங்கு வரை அதிகப்படுத்தலாம். தரையின் மீது படும் ஒளியைத் திருப்பிப் பிரதிபலிக்கும் திறன் 30 விழுக்காடு வரை கூடுதலாகும். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான விளக்குகளை எரித்தாலும் நல்ல வெளிச்சம் கிடைக்கும். மின்சாரத் தேவை குறையும். கட்டணத்தில் சிக்கனம் ஏற்படும்.

பழைய தரைகளைப் புத்தம் புதியதைப் போல் மாற்றி  அமைக்கலாம். குறைந்தபட்சப் பராமரிப்பே போதுமானதாக இருக்கும். தரையின் மீது கனமானபொருட்களை இழுத்துச் செல்வதால் ஏற்படும் கீறல்கள் தோற்றத்தின் அழகைக் கெடுக்காத வகையில் தவிர்க்கப்படும். கறைகள் படிவதும் மட்டுப்படுத்தப்படும். இதனால் தரைகள் எப்போதும் பளிச்சென்று சுத்தமாகவே வைத்துக் கொள்ளப்படும். நீண்ட கால உழைப்பையும் உறுதி செய்யலாம். குறைந்த செலவில் பயன்படுத்தலாம்.

விற்கப்படும் நிலையில் வாங்கி வருவதை வேறு வகைகளில் நீர்ப்பதற்கும் அவசியம் இல்லை. அப்படியே தயார் நிலையில் பயன்படுத்தக் கூடிய விதத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தரையின் உறுதியை இறுக்கம் மிகுந்ததாக ஆக்குகிறது.
கண்ணுக்குத் தெரியாமல் ஆவியாகிக் காற்றில் கலக்கும் நச்சுப் பொருள் வகை எதுவும் ரெட்ரோபிளேட்டில் கிடையாது. இதனால் உடல் நலத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. பதினைந்து வருட காலத்திற்கு உத்தரவாதமும் தருகிறார்கள்.
பசுமைக் கட்டுமான விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. எனவே பசுமைக் கட்டுமான தரச்சான்று பெறுவதில் தடை இருக்காது.

ஜெர்மன் தொழிற்நுட்பம் - GERMAN TECHNOLOGY


மேற்கு ஜெர்மனியில் ஸ்டீன்நாக் என்ற நகரில் 1964 ஆம் ஆண்டு பாஸ்சல் என்ற நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள உத்திகளை உலகம் முழுவதும் கட்டுமானத் துறையில் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.இப்போது இந்தத் தொழிற்நுட்பம் இந்தியாவிற்கும் வருகிறது.பாஸ்சல் நிறுவனம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றதாகும். உலகம் முழுவதும்
சுமார் 60 நாடுகளில் இவர்கள் கட்டுமான நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

பாஸ்சல் டெக் சிஸ்டம் உத்தரங்களை அமைப்பதற்கு இந்த வழிமுறை மிகவும் பொருத்தமானது. வெவ்வேறு கனம் கொண்ட கான்கிரீட் பாளங்களை உருவாக்குவதற்கும் கையாள்வதற்கும் வசதியானது.  பெரிய, நீளவாக்கிலான உத்தரத்திற்குக் குறுக்காக, சிறிய உத்தரங்களை அமைப்பதற்கு இதை பயன்படுத்துவது எளிது.

ஒரே பாகத்தை இரண்டு திசைகளிலும் பயன்படுத்தலாம். குறுக்காகவும், நெடுக்காகவும் தாங்கப்பட வேண்டிய பகுதிகளுக்கு இது பெரிதும் வசதி அளிப்பதாக இருக்கும். அறைகளின் அளவுகள் எப்படி வேண்டுமானாலும் வேறுபடலாம். அதற்கேற்ற விதத்தில் தனித்தனிப் பகுதிகளாக அமைத்துக் கொள்ள பாஸ்சல் டெக் சிஸ்டம் வசதி அளிக்கிறது. தேவைக்கேற்ற நீளத்திற்கு நீட்டிக் கொள்வதும் எளிது.
பாஸ்சல்  ஈ   டெக் ,ஈ டெக் என்பது கான்கிரீட் ஸ்லாப் அமைப்பு வேலைகளை வெகு எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவும் ஒரு நவீன தொழிற்நுட்பம்.

 மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்சல் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இது.பேனல் அமைப்பு முறையில் இது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இதன் அதிகபட்ச உயரம் 7.5 செ.மீ மட்டுமே. இதன் முகப்பகுதி ஒன்பது அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 12 மி.மீ கனம் கொண்ட பிளைவுட் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த வகைப் பேனல்கள் எடை குறைவானவை. கையாள எளிதானவை. உறுதி உள்ளவை. இருபது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவை என்பதால் எடுப்பதும் தொடுப்பதும் எளிதாக இருக்கும். இவற்றைக் கொண்டு வேலை செய்வதற்கு தொழிலாளர்களே விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களது உற்பத்தித் திறனும் உயர்ந்த அளவில் இருக்கும்.

இதில் உள்ள இன்னொரு நன்மை என்னவென்றால் இதற்குக் கிரேன் வசதிகள் தேவைப்படாது. ஆட்களைக் கொண்டே அமைக்கலாம்.வேலைகள் நடக்கும் போது விபத்து எதுவும் நேர்ந்துவிடாத வகையில் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். இது இவர்களது வடிவமைப்பு நேர்த்தியைக் காட்டுகிறது. ஸ்லாப்களைஅமைப்பதை விளையாட்டு போல் செய்து முடிக்க ஈ டெக் ஏற்றது. ஒரு அடி கனம் கொண்ட ஸ்லாப்களைக் கூட எளிதாக அமைக்கலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. கிடைமட்ட நிலையில் ஸ்லாப்கள் அமைக்கும் பணிக்கும் ஈ டெக் மிக மிகப் பொருத்தமானது.

கிடைக்கும் அளவுகள்

60X125, 45X125, 30X125, 60X120, 45X120/ 30X120, 60X90,60X85,60X60,30X 60என்ற அளவுகளில் ஈ டெக்குகள் கிடைக்கின்றன. அறைகளின் அளவுகள் விதவிதமாக மாற்றி  அமைக்கப்பட வேண்டிய தேவை வரலாம். அதனால் ஒன்றும் குறை ஏற்படப் போவதில்லை. 5 செ.மீ வரையிலான சின்னச் சின்ன மாற்றங்களைத் தகுந்த விதத்தில் உள்ளடக்கி இணைத்துக் கொள்ளலாம்.
பாஸ்சல் நிறுவனத்தின் ஐ டென்ட் என்ற உத்தி வேறு எந்த நிறுவனமும் அறிமுகப்படுத்தாத ஒன்று என்றே கூறலாம்.

உலர் சுவர் என்றொரு உயரிய தொழிற்நுட்பம் ! DRY WALL TECHNOLOGY


உலர் சுவர் (ட்ரை வால் )எனும் புதிய தொழிற் நுட்பத்தை 1917 ஆம் ஆண்டிலேயே கண்டு பிடித்து விட்டார்கள். இந்தியாவில் இப்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

செயல்படுத்துவது எப்படி?

உலர் சுவர் அமைக்கும் முறையைப் படிப்படியாகக் கவனிக்க வேண்டும். முதல் கட்டமாக ஜிப்சம் உப்பை எடுத்துக் கொண்டு அதைச் சூடேற்ற வேண்டும். நன்கு அரைக்கப்பட்ட நிலையில் ஜிப்சம் இப்படி வறுத்து எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சூடேற்றும்போது ஜிப்சம் உருகி இளகி ஒரே கட்டியாக உருமாறும். இந்த மாற்றம் நிகழும்போது அதிக அளவு கரியமில வாயு வெளிப்படும். இது புவி வெப்பமயமாவதை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக இருக்கும். இந்த வகையிலான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் போக்கு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

இவ்வாறு ஏற்படும் சுற்றுச் சூழல் மாசைக் குறைப்பதற்கு உலர் சுவர் முறை பெரிதும் கை கொடுக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சன்னிவேல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சீரியஸ் மெட்டீரியல்ஸ் என்ற நிறுவனம் எக்கோராக் என்ற கட்டுமானப் பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதை உற்பத்தி செய்வதற்கு வெப்பம் வேண்டியதில்லை. மூலப் பொருட்களையும் முதன் முறையாக வெட்டி எடுத்துப் பயன்படுத்த வேண்டிய தேவை குறைவு. பயன்படுத்தப்பட்ட பொருட்களையே மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தலாம்.

தேவைப்படாத, தொழிற்சாலைக் கழிவுகளையே 85% வரை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம்.
எரிசாம்பல், உலைக்களத் தூசி, கசடு, ஆலைக் கழிவுகள் போன்றவற்றையே மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம். இவற்றைத் தண்ணீருடன் கலந்து அச்சுக்களில் வார்த்துத் தகடு வடிவில் உற்பத்தி செய்யலாம். இதற்கு எந்த விதத்திலும் வெப்பம் தேவைப்படாது. வழக்கமான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பகுதி இருந்தாலே போதும். எவ்வளவு மிச்சம் பாருங்கள்.
ஜிப்சம் பலகைகளைத் தயாரிப்பவர்கள் ஜிப்சத்தை அரைத்துச் சூடேற்றி  அதனுடன் செல்லுலோஸ் ,
ஸ்டார்ச் ஆகிய தாவர அடிப்படையிலான பொருட்களைக் கலப்பார்கள். இவை பலகைகளில் இடம் பெற்றிருப்பதை அந்துப் பூச்சிகளும் கறையான்களும் எளிதில் மோப்பம் பிடித்துவிடும். அரித்துத் தின்று விட ஆரம்பிக்கும்.
எக்கோ ராக்கில் இது மாதிரியான பொருள் எதுவும் இல்லவே இல்லை. எனவே, இதைக் கொண்டு உருவாக்கப்படும் பகுதிகளில் கறையான் தின்று ஓட்டையாகும் கோளாறு ஏற்பட வழி இருக்காது. பூஞ்சை படராது. பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவு.
பராமரிப்புச் செலவும் அதே அளவுக்குக்  குறையும்.

அமெரிக்காவில் இந்த உலர் சுவர் மூலப் பொருட்களால் கிட்டும் நன்மைகளை வெகுவாக உணர்ந்திருக் கிறார்கள். வட அமெரிக்காவில்
மட்டுமே இந்த வகையில் 85 பில்லியன் சதுர அடி உலர் சுவர்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள் என்றால் பாருங்களேன்.
கட்டுமானச் செலவை குறைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் நமக்கு இது மிகவும் தேவைதான்.

அடுத்த தலைமுறை தொழிற்நுட்பம் ! ஆக்டிவ் டே லைட்டிங் ! ACTIVE DAY LIGHTING



என்ன அது ஆக்டிவ் டே லைட்டிங்?
இயற்கையாகக் கிடைக்கும் பகல் வெளிச்சத்தை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்வதுதான் இதன் நோக்கம்.வழக்கமாகச் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சூரிய ஒளிமின்கலப் பட்டைகளைக் கூரைப் பகுதியில் அமைப்பார்கள். இவை, சூரிய ஒளியை உள்வாங்கி அதனை மின்சாரமாக மாற்றிக் கொடுக்கும். இந்த மின்சாரத்தைக் கொண்டு விளக்குகளை எரிப்பது, காற்றாடிகளைச் சுழலவிடுவது போன்ற வேலைகளைச் செய்து கொள்வோம்.அதற்குப் பதிலாக, ஒளிஇழை வடங்களை ( ஆப்டிக் ஃபைபர் கேபிள்) உபயோகிக்கலாம். இவை சூரிய ஒளியை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த ஒளியை வேறு பல இடங்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கும். நேரடியாகச் சூரிய ஒளி பட வாய்ப்பில்லாத, கட்டடத்தின் பிற பகுதிகளுக்கு வெளிச்சத்தை அளிக்கும்.

சூரிய மின் கலப் பட்டைகளையும் ஒளி இழை வடங்களையும் ஒரே சேர அமைக்கும் உத்தியை ஆக்டிவ் டே லைட்டிங் என்று சொல்லலாம்.கூரை மேல் கண்ணாடியைப் பதித்து வைத்தால் அதன் வழியாகச் சூரிய வெளிச்சம் உள்ளுக்குள் வந்துவிட்டுப் போகிறது.. இதற்குப் போய் எதற்காகப் பெரிதாக மெனக்கெட வேண்டும் என்று கருதுவீர்கள். 

இது சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள எளிமையான வழிதான். ஆனால் ஒன்றை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறீர்கள். நீங்கள் கூரையில் பதித்து வைத்திருக்கும் கண்ணாடி அதே இடத்தில்தான் இருக்கும்.  சூரியன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே போகும். இதனால் என்ன ஆகும்? அறைக்குள் விழும் வெளிச்சத்தின் கோணம் மாறும். அளவும் மாறும். சில  நேரங்களில் வெளிச்சம் விழாமலேயே கூடப்போய்விடலாம்.இதற்குப் பதிலாக, சூரியன் நகர, நகர அதைத் தொடர்ந்து பின்பற்றும் ட்ராக்கர் என்ற சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்போது சூரியனின் போக்கைப் பின்பற்றிக் கண்ணாடியும் நகரும். அறைக்குள் தொடர்ந்து வெளிச்சம் கிடைத்துக் கொண்டே இருக்க வழி ஏற்படும்.

கூரையிலாகட்டும், சுவர்களிலாகட்டும் ஆங்காங்கே திறப்புகளை ஏற்படுத்தினால் வெளியில் உள்ள வெளிச்சம் தன்னால் உள்ளுக்குள் வரப் போகிறது.. இதற்குப் போய் எதற்கு ஒளி இழை வடம் என்று கேட்க நினைப்பீர்கள்.நீங்கள் சொல்வது போல் சுவர்களிலும் கூரைகளிலும் திறப்புகளை ஏற்படுத்தலாம்தான். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் அந்தந்த அறைகளில் வேண்டுமானால் வெளிச்சம் உள்ளே வரலாம். அடுத்தடுத்து உள்ள, கட்டடத்தின் உட்பகுதிகளுக்கு அதைக் கொண்டு செல்ல இயலாது. அப்படியே கொண்டு சென்றாலும் அதன் அளவும் அடர்த்தியும் குறைந்து போகும்.அடுக்கு மாடிக் கட்டடங்களில் அடுத்தடுத்த தளங்கள் வந்துவிடும் என்பதால் கூரைப் பகுதியில் திறப்பு வைப்பது என்பது இயலாத காரியம்.

ஒளி இழை வடங்களை எங்கு வேண்டுமானாலும் வளைத்து நெளித்து எடுத்துச் செல்லலாம். சிறு துளைகள் வழியாகவும் நுழைத்துக் கொண்டு செல்லலாம்.குறுகலான வளைவுகளைக் கடந்தும் வெளிச்சம் தங்கு தடையின்றிப் பயணிக்கும். இரண்டே இரண்டு அங்குல விட்டம் கொண்ட பகுதிகள் என்றாலும் இத்தகைய மடிப்புக்களால் ஒளியின் பயணம் தடைப்படாது.

சூரிய ஒளி படுகிற இடத்தில் இருந்து, பயன்படுத்தப்பட வேண்டிய பகுதிக்கு ஒளி இழை வடம் மூலம் கொண்டு சென்றுவிடுகிறோம் என்று வையுங்கள். அங்கு இந்த ஒளியை விதவிதமான தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜிசிடி வளைகுடா நாட்டு தொழிற்நுட்பம் !


ஜிசிடி என்பது கல்ஃப் கான்கிரீட் டெக்னாலஜி(Gulf Concrete Technology)  என்பதன் சுருக்கமாகும். போர்டோரிகோ நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் கார்மெலோ குழுமம்.

இவர்கள்தான் ஜிசிடி தொழிற்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்துவதில் கிடைக்கக் கூடிய
தனித் தன்மை வாய்ந்த கட்டுமான வசதிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வது  நன்மை தர வல்லது.
முன்னதாகவே கட்டடப் பகுதிகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில் பொருத்த வேண்டும். இதுதான் இதில் அடிப்படையான விசயம். முப்பரிமாண வடிவில் எடைகுறைவான பகுதிகளை உருவாக்குவது இந்தத் தொழிற்நுட்பத்திற்கு முக்கியத் தேவையாக இருக்கிறது.

விரிவாக்கப்படும் பாலிஸ்டைரீன் கொண்டு பகுதிகளை அமைக்கிறார்கள். இரண்டு வலுவான பலகை போன்ற இடைவெளிகளுக்கு நடுவில் பாலிஸ்டைரீன் இடம்பெறச் செய்யப்படுகிறது. கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு வலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்து அவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் பாலிஸ்டைரீனை வைக்கிறார்கள்.
மேலும் உறுதி சேர்ப்பதற்காக, வெளியில் இருந்து இரும்பு ட்ரஸ்களைப் பாலிஸ்டைரீனுக்குள் செலுத்துகிறார்கள். இவற்றை வெளிப்படலத்தில் உள்ள இரும்பு வலைகளுடன் பற்ற வைப்புச் செய்துவிடுகிறார்கள்.
இந்தத் தகட்டின் தடிமன் 10 காஜ் அளவுக்கு உள்ளது.

இதனைக் கொண்டு போய்க் கட்டுமானம் நடைபெற வேண்டிய இடத்தில் நிறுத்துகிறார்கள். வலுவான கான்கிரீட் கலவையை இதன் இரண்டு பக்கங்களிலும் இயந்திரங்களைக் கொண்டு தெளிக்கிறார்கள்.சுவர்கள், கூரைப் பகுதிகள் போன்றவை விரைவாக உருவாகிவிடுகின்றன.இந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல நன்மைகளைப் பெறலாம். ஜிசிடி இன்சுலேட்டட் கான்கிரீட் பேனல் பில்டிங் சிஸ்டம் என்பது ஒட்டுமொத்த உத்தியாகும்.இதைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டடங்களின்  மீது காற்று கடும் வேகத்துடன் மோதினாலும் கட்டடத்திற்கு ஒன்றும் ஆகாது. இந்த வகைக் கட்டடங்கள் மணிக்கு40 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் வீசக் கூடிய சூறாவளிக் காற்றுகளையும் தாக்குப் பிடிக்கக் கூடியவையாக இருக்கும்.

மேலும் , நில நடுக்கத்தையும் தாங்கி நிலைத்து நிற்கக் கூடிய கட்டடங்களைக் கட்ட முடியும். ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தை எதிர்கொள்ளக் கூடிய கட்டடங்களை ஜிசிடி தொழிற்நுட்பத்தின் மூலம் அமைக்கலாம்.வெப்பத்தினால் கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கலாம். எரிச்சலூட்டக் கூடிய இரைச்சலையும் மட்டுப்படுத்தலாம்.
வளைகுடா நாட்டின் சீதோஷ்ண நிலையை ஒத்த எந்த நாட்டுக்கும் இது ஏற்றது.

இம்பாலா காரில் இன்டீரியர் ஆர்கிடெக்சர் !



ஜாலியாக காரை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் டூர் செல்கிறோம். ஆனால், போய் சேர்ந்த பிறகு வாகனத்தை விட்டு விட்டு நல்ல ஹோட்டல் எது என தேடி களைத்துப் போகிறோம். நமது பர்சும் இளைத்துப் போகிறது. இப்படிக் களைத்துப் போன ஒரு நபர் கைதேர்ந்த இன்டிரியர் ஆர்க்கிடெக்டாக இருந்தால் என்ன செய்திருப்பார்?

ஹாலந்தைச் சார்ந்த ஒரு இன்டிரியர் ஆர்க்கிடெக்ட் ஜோசப் பெனஸ்கி என்பவர் தனது காரை ஒரு நடமாடும் மினி வீடாக மெனக்கெட்டு மாற்றியிருக்கிறார். அடிக்கடி டூர் செல்லும் அவருக்கு தங்குமிடம் என்பது மிகவும் கடினமாக இருக்கவே மாற்று வழி தேடி ஆராய்ந்ததின் பலன்தான் அவரது வீல் ஹவுஸ்.

  அதிகபட்சம் 15 நிமிடங்களில் இந்தக் கார் வீடாகிறது. மறுபடியும் 15 நிமிடங்களில் வீடு காராகி பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதன் கதவுகள் மேற்புற திறப்பு வகையைச் சார்ந்தது என்பதால் காரை நிறுத்தி விட்டு கதவை மேல்நோக்கித் திறந்து வைத்தால் மிகப் பெரிதான இடம் காரைச் சுற்றியும் கிடைக்கிறது. இந்தக் காரின் இருக்கைகளை மாற்றி  அமைத்தால் படுக்கையறை கிடைத்துவிடும். மேலும், இதில் கிச்சன், ரெஃப்ரிஜரேட்டர், பாத்ரூம் போன்றவையும் உண்டு.

மினி வீடாகவும், மினி ஹோட்டலாகவும் தனது காரை மாற்றிக் கொள்வதால் தனக்கு துவக்கத்தில் செலவிருந்தாலும், இப்போதெல்லாம் தங்கும் இடத்திற்கென தனியே செலவு செய்ய வேண்டியதில்லை என்கிறார் பெனஸ்கி. இவரது ஹாலிடே காரைப் பார்த்த நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் தங்களுக்கும் இதே போன்ற காரை செய்து தரச் சொல்லி ஆர்டர் செய்திருக்கிறார்களாம். பெனஸ்கி தற்போது இம்பாலா கார்களை மினி வீடாக மாற்றி அமைக்கும் முயற்சியில் படு பிஸியாக இருக்கிறார்.
வெள்ளைக்காரர் ஒருவர் இம்பாலா காரில் கைவண்ணத்தைக் காட்டும் போது நமது டூர் பிரியர்கள் இன்னோவா கார்களை டூ இன் ஒன்னாக மாற்றி அமைத்தால் ஹோட்டல்களைத் தவிர்க்கலாமே!

கரியமில வாயு இல்லாத கட்டுமானப்பொருள் !


இங்கிலாந்தில் உள்ள இலண்டனைச் சேர்ந்தது லிக்னாசைட் நிறுவனம். 
இவர்கள் உருவாக்கி இருக்கும் உலகின் முதல் கரி எதிர் கட்டுமானப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டுமானக் கட்டிக்குக் கார்பன் பஸ்டர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.கார்பன் பஸ்டரில் சுமார்பாதி அளவுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.

பழைய குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் துணைத் தயாரிப்புப் பொருளாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கார்பன் பஸ்டரைத் தயாரிக்கலாம். கார்பன் பஸ்டரின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா?

இது கணிசமானஅளவுக்குக் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது. ஒரு பொருளை உருவாக்கும்போது எந்த அளவுக்குக் கரியமிலவாயு உற்பத்தி ஆகிறதோ அதைவிட அதிகஅளவு கரியமிலவாயுவை அது உறிஞ்சிக் கொள்ளுமானால் அது சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்வதாக அமையும். கார்பன் பஸ்டர் அப்படித்தான் செயல்படுகிறது.
ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர் சுமார் 14 கிலோ அளவிலான கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது. கிரீன்விச் பல்கலைக் கழகத்தில் கார்பன்பஸ்டரை முற்றிலுமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அனல் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஆலைகளில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைத் தண்ணீருடன் கலந்து, கரியமில வாயுவை உள்ளிழுக்கும் புது வகைக் கட்டுமானப் பொருளைத் தயாரிக்கலாம்.

இயற்கையில் கிடைக்கும் ஜல்லிகளுக்குச் சரியான மாற்றாகக் கார்பன்பஸ்டரைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட மரச் சீவல், கண்ணாடி, கிளிஞ்சல்கள் போன்றவற்றைக் கொண்ட கலவையைக் கொண்டும் கார்பன் பஸ்டரை உருவாக்க முடியும். இத்தகைய கட்டுமானப் பொருளை உருவாக்கும் போது கரியமில வாயு குறைந்த அளவுக்கே உற்பத்தியாகிறது. இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஏற்றது. உலகிலேயே உற்பத்தியின் போது குறைந்த அளவு கரியமிலவாயுவை வெளியிட்டு, தயாரிக்கப்படும் அதிநவீன கட்டுமானப் பொருள் கார்பன் பஸ்டர்தான் என்று இதன் தயாரிப்பாளர்கள் பெருமை பொங்கக் கூறுகிறார்கள்.
இங்கிலாந்தில் 2016 ஆம் ஆண்டிற்கெல்லாம் அனைத்து வீடுகளும் கரியமிலவாயுவை வெளியிடாத கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்திருக்கிறார்களாம்.

மெட்டல்கிராஃப்ட்டின் உலோகப் படைப்புகள் !


உங்கள் கட்டிடம் கட்டுமானப் பணியுடன் நிறைவு பெற்றுவிடாது. கட்டிடத்திற்கு ஏற்ற காம்பவுண்டுகள், கேட்டுகள், கதவுகள், ஜன்னல்கள், பலவித கிரில் வேலைப்பாடுகள், பால்கனிகள், படிக்கட்டுகள் என பலவித உலோக படைப்புகள் உள்ளே வந்தால்தான் உங்கள் வீடு முழுமை பெறுகிறது.

சென்னையைச் சேர்ந்த மெட்டல்கிராஃப்ட் நிறுவனம் ஒரு கட்டிடத்திற்குத் தேவையான அனைத்துவிதமான உலோக தடுப்புகள், ஜன்னல்கள் எனத் தொடங்கி, காம்பவுண்டு சுவர்கள், கேட்டுகள் என நமது தேவைகளின் பெரும் பகுதியை நிறைவேற்றி  விடுகிறது. இதன் உலோக சுழற்படிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை. அவை நிறுவுவதற்கு மிகவும் எளிதானவை. மேலும், வழக்கமான கார்டன் ஃபர்னிச்சர்களுக்கு மாறான சூப்பர் லுக்கினைத் தரும் மெட்டல் ஃபர்னிச்சர்களை இது தயாரித்து அளிக்கிறது.

பல் வகையான உலோக படைப்புகளை மெட்டல்கிராஃப்ட் தயாரித்து அளித்தாலும், இதன் காம்பவுண்டு கேட்டுகள் மிகவும் பிரசித்தமானவை. வழக்கமான கதவுகள், மரக் கதவுகள், ஸ்லைடிங் கேட்டுகள், யூரோ மாடல் கேட்டுகள், ஆட்டோமேடிக் கேட்டுகள், தொழிற்சாலை மற்றும் கிடங்குகளுக்கான கேட்டுகள், ரோலர் கேட்டுகள் போன்ற பலவகை கேட்டுகளையும் தயாரிக்கும் நிறுவன
மாக இது விளங்குகிறது.இவர்களிடமிருந்து தானியங்கி முறையில் திறந்து மூடும் கதவுகளை 3 முதல் 10 மீட்டர் வரையிலான அகலத்திற்கு அமைக்கலாம். அடிக்கடி திறந்து மூட வேண்டி இருக்கிறதா? போக்குவரத்து அதிகமா? மனிதர்களை
மட்டும் அனுமதிக்க வேண்டுமா? கன ரக வாகனங்களையுமா? உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் அதற்கேற்ற கதவுகள் கிடைக்கின்றன.பெரும்பாலும் இந்த வகைக் கதவுகளை மின் காந்த அடிப்படையில்தான் இயக்குகிறார்கள்.

இத்தகைய கதவுகளைப் பராமரிப்பது பெரிய தொல்லையாக இருக்குமோ என்றும் கவலைப்பட வேண்டியதில்லை. பராமரிப்பே தேவைப்படாத வகைகளெல்லாம் கூடக் கிடைக்கின்றன.அளவில் பெரியவையாகவும் எடையில் கனமானவையாகவும் இருக்கும்.
கதவுகளைத் திறந்து மூடும் வேலைகளைச் செய்வதற்குக் கனரக மோட்டார்களைப் பொருத்துகிறார்கள். இந்த வகைக் கதவுகளை இயக்குவதற்கு 400 வோல்ட் மின் அழுத்தம் தேவைப்படும். இது மும்முனை மின்சாரமாகவும் இருக்க வேண்டும்.கதவுகளைத் திறந்து மூடும் வேகம் வியப்படைய வைக்கிறது. விநாடிக்கு 3 மீட்டர் தொலைவு வரையிலான வேகத்தில் கதவுகள் இயக்கப்படுகின்றன.கதவுகளை இயக்குவதை எளிதாக ஆக்கும் முகப்பு, விசைகள் ஆகியவற்றையும் இவர்களே
தயாரித்துத் தருகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப் பல மாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன. நீண்ட உழைப்பு, பாதுகாப்பு போன்ற அம்சங்களையும் உறுதி செய்யலாம். தயார் நிலையில் விற்கப்படும் கேட்களை வாங்கி வந்து பொருத்திக் கொள்ளலாம். பொருத்துவதை விளையாட்டுப் போல் செய்துவிடலாம். எந்தக் கஷ்டமும் இருக்காது. இணைப்பு என்றாலே அது வெல்டிங் செய்யப்பட்டால்தான் உண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? வெல்டிங்கிற்கு வேலையே இல்லாமல் இணைத்துப் பொருத்தும் உத்திகளெல்லாம் வந்துவிட்டன.

நீராற்றுவதற்கு ஒரு புதிய மாற்று வழி !



வழக்கமாகக் கான்கிரீட்டைப் பக்குவமடைய வைக்க என்ன செய்கிறோம்? பலகைகளைஅடைத்து முட்டுக்கொடுத்து அந்தப் பரப்பின் மேல் கான்கிரீட் கலவையைக் கொட்டுகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குப் பரப்பின் மேல் தண்ணீர் தேங்கி நிற்குமாறு செய்கிறோம். அப்புறம் முட்டுப் பலகைகளை விலக்கிக் கொள்கிறோம்.

இதுதான் காலகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் முறை. இப்படித்தான் நாம் கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துகிறோம். இது போதுமானதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கான்கிரீட் தயாரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
சிமெண்ட், மணல், கம்பி எல்லாமே தர
மானவையாக இருந்திருக்கலாம். ஆனால் நீராற்றும் வேலையை முறையாகச் செய்தால்தான் கட்டடம் வலுவுள்ளதாக இருக்கும். இதில் குறை வைத்தோமானால் கட்டடத்தின் ஆயுள் குறையத்தான் செய்யும். கான்கிரீட்டின் உட்பகுதியில் இருக்கும் தண்ணீர் மெல்லிய துளைகள் வழியாக மேலே உயரும். இப்படி உயரும் நீரானது ஆவியாகி மறைந்து போகும். அவ்வாறு நேராமல் இருப்பதற்காகத்தான் கான்கிரீட் பரப்பின் மேல் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.தண்ணீர் தேங்கி நிற்பதால் கான்கிரீட்டின் மேல் தூசி படிவதும் தடுக்கப்படுகிறது. சுருங்குதல்  முதலிய  குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

விதவிதமான வழிமுறைகள்:

நீராற்றும் வேலையைச் செய்ய பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.கான்கிரீட் தளத்தின் மேல் பாத்தி கட்டி தண்ணீரைத் தேக்குவது, தண்ணீரைத் தெளிப்பது, ஈரக் கோணிகளைக் கொண்டு மூடி வைப்பது, பாலிதீன் தாள்களைப் பரப்புவது, இப்படிப் பல வழிகளில் நீராற்றல் வேலையை மேற்கொள்கிறோம். இந்த வழிமுறைகள் பொருத்தமானவைதானா? இந்த வகையில் செயல்பட அதிக நேரம் தேவைப்படும். உடல் உழைப்பும் அதிகமாக ஆகும். அதனால் கூலிச் செலவும் அதிகரிக்கும். தேவைப்படும் தண்ணீரின் அளவு கணிசமானதாக இருக்கும்.நீராற்றும் காலமும் அதிகமாக அமையும். தண்ணீர் ஆவியாக வறண்டுவிட்டால் வெடிப்புகள் தோன்றும்.

மாற்று வழி:

வழக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி  நீராற்றும் வேலையைச் செய்வதில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன. கான்கிரீட் கலவை இடப்பட்ட உடனேயே அதன் மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும். இதற்குப் பதிலாக அக்ரிலின் எமல்ஷன் வகையிலான பூச்சுக்களைக் கான்கிரீட் பரப்பின் மேல் பூசலாம்.  இந்த வகைப் பூச்சை ஏற்படுத்துவதற்குத் தூவல் முறையைப் பின்பற்றலாம். அல்லது பெயின்ட் அடிப்பதைப் போல் பிரஷ் கொண்டும் பூசலாம்.கான்கிரீட் ஆனாலும் கலவை ஆனாலும் இவ்வாறு ஒரே ஒரு முறை செய்தால் போதும். ஆரம்ப கட்டத்தில் இறுகும் வேலை நடக்கும் போது இது சரியான அணுகுமுறையாக இருக்கும். பூசப்படும் பூச்சு கான்கிரீட் பரப்பின்மேல் சீரான படலமாகப் பரவும். இந்தப் படலம் கான்கிரீட்டிற்குள் இருக்கும் தண்ணீர் வீணாக ஆவியாகி வெளியேறிவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்யும். கான்கிரீட் வெகு விரைவில் உலர்ந்து போகாமல் காக்கும். இதனால் வெடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். கான்கிரீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேற வகையில்லாமல் சிறைப்படுத்தப்படும். ஆகவே, கான்கிரீட் நன்கு இறுகிக் கெட்டிப்படும். அதுதானே நமக்குத் தேவை?

பூமியை செதுக்கும் டென்மார்க் ரியல் எஸ்டேட் !



சதுர அங்குலம் 10 டாலர் என்ற கணக்கில் வீட்டை விற்கும் காஸ்ட்லி ரியல் எஸ்டேட் சந்தையை உடைய இங்கிலாந்தை போன்றோ வாராவாரம் ஒரு 200 மாடி டவரை திறந்து அத்தனையுமே ஒரே மாதத்தில் விற்று தீர்க்கும் ரியல் எஸ்டேட் பரகாசூரன்  என பெயரெடுத்த துபாய் போன்றோ டென்மார்க் ரியல் எஸ்டேட்டிற்கு அத்தனை பெரிய அந்தஸ்து இல்லைதான்.

நமது தென்னிந்திய ஒட்டுமொத்த பரப்பை விட துளியூண்டு அதிகம் பெரிதான டென்மார்க், பால்பண்ணை விவசாயத்திற்குத்தான் பெயர்போனது என்று இன்னமும் நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் 2000த்திற்கு பிறகு நீங்கள் டென்மார்க் செய்திகளைஅறிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். களிமண் கட்டடங்களாக காட்சியளிக்கும் ஆப்கானிஸ்தானில் கூட ரியல் எஸ்டேட் விஸ்வரூபம் எடுக்க துவங்கியிருக்க (படத்தை சொல்லலைங்க) சுற்றுலா, கல்வி, விருந்தோம்பல், ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற சிறந்து விளங்கி வரும் டென்மார்க்கில் ரியல் எஸ்டேட் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால், ரியல் எஸ்டேட் என்பது அதி உயர கட்டிடங்களின் (Vertical growth) வளர்ச்சிதான் என்பதை உடைத்தெறிந்து பரப்பளவில்
(Horizontal growth)  வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கான முக்கிய உதாரணங்கள்தான் டென்மார்கில் நகரங்களை ஒட்டிய புறநகர் மற்றும் கிராமப் புறங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள். நம்மூரில் போன்று அல்லாமல் இங்கு ரியல் எஸ்டேட் பிஸினஸை செய்து வருவது சாட்சாத் அரசாங்கமே.

   இதற்காக பயன்படுத்தப்படாத நிலங்களை சீர் செய்வது, சமன் செய்வது, வீடுகள் கட்டுவதற்கான சுற்றுப்புற சூழ்நிலைகளை ஏற்படுத்துவது கண்கள் கவரத்தக்க வடிவங்களில் லே அவுட் அமைப்பது போன்ற வேலைகளை, ஒரு தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது டென்மார்க் அரசு. இவர்களது கை வண்ணத்தில் உருவாகும் லே அவுட்டுகளை பார்த்தவுடனேயே வாங்குவதற்கு ஆவலாக பறக்கிறார்கள் டென்மார்க் மக்கள்.

     அதிலும், ஒஷாகா என்கின்ற பகுதியில் அமைந்திருக்கும் வட்ட வடிவமான சர்க்கிள் லேண்டில் இடம் பிடிக்க அத்தனை போட்டி. 400 அடி குறுக்களவு உடைய மிகப்பெரிய வட்ட நிலத்தில் சுமார் 24 தனி வீடுகளுக்கான லே அவுட்டை இந்நிறுவனம் அரசுக்காக வடிவமைத்து  தந்திருக்கிறது. ஒரு வட்டத்தின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 1,25,600 சதுர அடி. இது போன்று 40 வட்ட லே அவுட்டுக்கள் உருவாக்கப்பட்டு அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. ‘வட்ட வடிவமாக லே அவுட் போடப்பட்டால் ஒரு நிலத்தோடு இன்னொரு நிலம் ஒட்டாமல் ஏராளமான இடைவெளி பரப்புடன்   தனி வீடுகளை அமைக்கலாம்’ என்கிறார்கள் இந்த நிலத்தை செதுக்கும் ஆர்க்கிடெக்டுகள். இதுமட்டுமன்றி  புதுப்புது வடிவத்தில் காண்பதற்கு அழகான ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள் முழு வீச்சில் டென்மார்க் முழுவதும் போடப்பட்டு வருகின்றன.

வழக்கமான வடிவத்தில் அல்லாது உருவான லே அவுட்டுகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டதைக் கண்டு மற்றொரு ஐரோப்பிய நாடான நெதர்லாந்திலும் பூமியை செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் உள்ள ஸ்டார் வடிவ லே அவுட் அதற்கு ஒரு உதாரணம்.

ஏன் கூரை ? ஏன் செலவு ?




ஒருவீட்டின் மொத்த கட்டுமானச் செலவில் கபளீகரம் செய்வது கூரைகளும், சுவர்களும்தான். அதற்காக அவற்றை தவிர்த்துவிட முடியுமா என்ன? எத்தனை செலவு ஆனாலும் அதை அமைத்துத்தானே ஆக வேண்டும் என நீங்கள் சளைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் கூரைகளையும், சுவர்களையும் வைத்துத்தான் நிறைய இன்டிரியர் பணிகள் நடக்கின்றன. அவற்றை அழகாக்குவதற்காகத்தான் நாம் நிறைய மெனக்கெடுகிறோம். ஆனால் இதெல்லாம் நம்முடைய பார்வைதான். நாம் இதற்காக வகுத்து வைத்திருக்கும் வீடு குறித்த இலக்கணங்கள் இதுகாறும் இப்படித்தான் அமைந்திருக்கின்றன.

ஆனால், இலக்கணங்களை மீறுவதும் கூட ஒரு அழகு. அப்படித்தான் ஒரு ஆர்கிடெக்ட் வீட்டின்
அடிப்படை இலக்கணங்களை மீறி  ஒரு புதிய இலக்கணத்தை தோற்றுவித்திருக்கிறார். எல்லோராலும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளபட முடியாத அளவிற்கு இவரது படைப்பு இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் முக்கிய நாடுகள் இவரை திரும்பி பார்க்க செய்திருக்கிறார்.
ஃபெர்னான்டா மேத்யூஸ் என்னும் பெயருடைய பிரேசிலைச் சார்ந்த ஒரு பெண் ஆர்கிடெக்ட் அடிப்படையில் வித்தியாசமாகவே சிந்திக்கக் கூடியவர். சுவர்களும் தரைகளும் இருந்தால்தான் வீடா? மழைக்காலத்திலும், கடுமையான வெயில் காலத்திலும் மட்டும்தான் கூரைகளின் தேவை நமக்கு தேவைப்படுகிறது.

மழையும் அல்லாத வெயிலும் அல்லாத மிதமான வானிலை காலங்களில், கூரையை எதற்காக அமைக்க வேண்டும்? தேவையில்லாத பளுவினை வீட்டிற்கு ஏன் தரவேண்டும்? என சிந்தித்து தான் கட்டிய வீட்டிற்கு கூரையையே தூக்கி விட்டார். அதுமட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாகிவிட்டது. முழுவதுமே நம்முடைய வீடு என்கிற போது லுக்கும், படுக்கையறைக்கும், சமையலைறைக்கும் இடையே எதற்கு சுவர்கள். கழிவறைக்கும், குளியலறைக்கும் கூட சிறு
மறைப்பு இருந்தால் போதாதா? என்றெல்லாம் யோசித்து தனக்கு பிடித்த கனவு வீட்டை அதிக செலவில்லாமல் அதேசமயம் ஆடம்பரமாக வடிவமைத்திருக்கிறார் ஃபெர்னான்டா மேத்யூஸ்.

இவர் கட்டியிருக்கும் வீடு பிரேசிலில் சாவ் பாலோ என்கிற பகுதியில் அமைந்திருப்பதால். இவரது நோக்கம் முழுவதும்
வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் சாவ் பாலோவில் மழை வாய்ப்பு என்பது 1.8 சதவிகிதம் தான். அதற்காக வளைகுடா நாடுகளை போல வெயிலும் வெளுத்து வாங்காது. மிக முக்கியமான விஷயம் கூரை மேல் ஏறி  வீட்டுக்குள் குதித்து
திருடும் திருட்டு படவாக்கள்  இங்கு கிடையாது.

சுமார் 2700 சதுரடியில் (250 சதுர மீட்டர்) அமைந்திருக்கும் இந்த வீட்டில் எந்த பகுதியிலும் கூரையே கிடையாது. சுவர்கள் கூட வீட்டைச் சுற்றி  அமைந்திருக்கும் சுற்றுச்  சுவர்களே. (தாய்ச் சுவர்) அன்றி  பார்டிஷன் சுவர்கள் என்பதே கிடையாது. வெகு சில இடங்களில் ஸ்டீல் கண்ணாடி மற்றும் மரப்பலகைகள் கொண்டு சிறு தடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அவையும் கலை நயத்தோடு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

“வீட்டிற்கும், வெளியேவும் நாம் காண்கிற ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. சுவர்களுக்கும் கூரைகளுக்கும் உள்ளே அடைப்பட்டுக் கொள்கிற சாதாரண மக்களுக்கு அந்த வித்தியாசம் புரியாது. எனது வீட்டின் அமைப்பும் அவர்களுக்கு பிடிக்காது” என்கிறார் ஃபெர்னான்டா.
உங்களுக்கு பிடித்திருக்கிறதா ?

கிரியேட்டிவ் சைக்கிள் ஸ்டாண்ட் !



என்னதான் நம் ஊரில் சைக்கிள்களை சுற்றுப்புறச்சூழலின் நண்பன், உடற்பயிற்சிக்கு உற்ற துணைவன் என வாயார புகழ்ந்தாலும், நகரத்துத் தெருக்களில் நம்மால் சைக்கிள்களை பார்க்கவே முடியாது. ஏனெனில், அதை இன்னமும் நாம் ஏழ்மையின் சின்னம் என்ற அளவிலேயே பார்க்கிறோம். மேல் நாடுகளில் அப்படி இல்லை. அதுவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் சைக்கிள்கள் இருக்கும். அதனாலேயே அந்த நாட்டு அரசுகள் சைக்கிள்களில் செல்வதற்குத் தனி பாதைகளும், வழிகளும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

அரசு சைக்கிள்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த மேல் நாட்டு கட்டுநர்களும், ஆர்க்கிடெக்டுகளும் தாங்கள் உருவாக்கும் கட்டிடங்களுக்கு சைக்கிள் பார்க்கிங் என தனி இடங்களை தவறாமல் வடிவமைக்கிறார்கள். அங்கு குடியிருப்புக் கட்டிடம், வணிக வளாக கட்டிடம் மற்றும் அரசு கட்டிடம் என அனைத்து வகைக் கட்டிடங்களிலும் தவறாமல் சைக்கிள் பார்க்கிங் என பிரதான இடத்தை ஒதுக்கி விடுகிறார்கள். (சென்னை ஷாப்பிங் மால்களில் சைக்கிள்களில் வருபவர்களைக் கண்டால்
வெளியே துரத்தி விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

மேல் நாடுகளில் சைக்கிள்களுக்கென இடம் விடுகிறார்கள். இதுதானா விஷயம்? என சொல்லி நகர்ந்து விடாதீர்கள். அவர்கள் இடம் விடுவதோடு, சைக்கிள் ஸ்டாண்டுகளை அட்டகாசமாக வடிவமைக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு வடிவம். ஒவ்வொரு நிறம். ஒவ்வொரு கான்செப்ட் என பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்த சைக்கிள் ஸ்டாண்ட் என்பது நீளமான பைப்புகளை குறுக்கே நிறுத்தி அதில் ஒரு சங்கிலியை இணைத்து சைக்கிள்களை நிறுத்துவோம். அவ்வளவுதானே. ஆனால், இவர்கள் அத்தனை எளிதாக சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை விட்டுவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இதனை வடிவமைப்பதற்கென்றே தனி ஆர்க்கிடெக்டுகள் உள்ளனர் என்பது நம் புருவத்தை உயர்த்தும் விஷயம்.விலங்குகள், பூக்கள், சீப்புகள், இராட்டினங்கள் போன்ற பல கான்செப்டுகளில் இதுபோன்ற வியத்தகு கை வண்ணங்களைக் காட்டுகிறார்கள் சைக்கிள் ஸ்டாண்டு ஆர்க்கிடெக்டுகள்.

மேலும், தங்கள் இணைய தளங்களில் இது போன்ற பல்வேறு வகையான உருவாக்கங்களை வெளியிட்டு, இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள அனுமதி தருகிறார்கள். (அதை அவர்களாகவே வந்து வடிவமைத்து நிறுவினால்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது). அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் டிசைன்தான் என்ல்லாமல், நாம் வடிவமைக்கும் டிசைன்களிலும் சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை வடிவமைக்கவும் அவர்கள் தயார்.நம் நாட்டிலும் குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்களை உருவாக்கும் கட்டுநர்கள் இதுபோன்று புதிய முயற்சியில் ஈடுபட்டால் நன்றாகத்தானே இருக்கும் .

ஜீரோ எனர்ஜி வீடு!


அதென்ன ஜீரோ எனர்ஜி வீடு? இயந்திர, மின்சார, வெப்ப ஆற்றல் எதுவுமே தேவைப்படாத வீடுதான் ஜீரோ எனர்ஜி வீடு (ஜீரோ எனர்ஜி சிஸ்டம்) என்பார்கள்.இது எப்படி இயலும் என்று எண்ணத் தோன்றும்.  மிகமிகக் குறைந்த அளவிலேயே இவற்றைப் பயன்படுத்திக் கட்டுமான வேலைகளைச் செய்து முடிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கான் கிரீட்டைப் பக்குவப்பட வைக்கும் வேலைகளை எடுத்துக் கொள்வோம். இதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. மின்சாரம் தேவைப்படக் கூடாது. செலவு ஆகும். வெப்பம் அல்லது குளிர்ச்சியைச் செயற்கையாக ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கக் கூடாது. இப்படி எல்லா வகையிலும் முடிந்த வரை செலவுகளைக் குறைந்த பட்ச அளவில் வைத்துக் கொள்ள முடியுமா?

என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?

சிமென்ட்டானது தண்ணீருடன் சேர்க்கப்படும்போது வெப்பம் வெளிப்படுகிறது. கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும்போது இதுதானே நிகழ்கிறது. அதாவது, வெப்ப ஆற்றல் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த வெப்பத்தையே கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டும். இது ஒரு உத்தி.ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் இருக்கிறது. அது நேரம் செல்லச் செல்லக் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு குறையவிடாமல் பாதுகாத்து நிலை நிறுத்துவது இன்னொரு உத்தி. வெப்பத்தைக் கடத்தாத கோணிகள், பாய்களைக் கொண்டு மூடி வைத்துப் பாதுகாப்பதை எளிதில் செய்ய முடியும் இல்லையா?
இதுமாதிரியான பல வழிமுறைகளைப் பின்பற்றுவதால், கிடைப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருப்பது குறைந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்தினால் வேறு பல வேலைகளையும் தேவைகளையும் குறைக்கலாம். அதன் மூலம் செலவுகளைத் தன்னால் கீழே கொண்டு வந்துவிடலாம். இதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்பது என்ன? எதற்காக?

முடிந்தவரை இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மின்சாரத்தை எதிர்பார்த்து நிற்பதைத்  தவிர்க்க வேண்டும். வெப்பத்தைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்காக அதை இழக்காமல் இருக்க வழி காண வேண்டும்.ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்ற வழிமுறை இதற்கெல்லாம் தீர்வை அளிக்கிறது. இது இத்தாலி நாட்டில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதை அவர்கள் எப்படிச் சாதித்தார்கள்?

கான்கிரீட் பக்குவடையும் நிலையில் அதனுடன் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் மற்றும் சேர்மானங்களை விதவிதமாக உருவாக்கினார்கள். இந்த விதத்தில் பல கடினமான வேலைகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. கான்கிரீட்டைப் பக்குவப்படுத்தும் தேவைக்கு அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாயிற்று. கட்டுமானத்தின் தரம் உயர்ந்தது. பாதுகாப்பான செயல்பாடுகளுக்கு வழி பிறந்தது.  வழக்கமான கட்டுமான உத்திகளைக் காட்டிலும் இது பல வழிகளிலும் மேம்பட்டதாக இருப்பது உணரப்பட்டது.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

கான்கிரீட் தயாரிப்பு, அதைப் பயன்படுத்தும் தேவை, பக்குவப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் குறைந்தபட்ச இயந்திர இயக்கம். மிகக் குறைந்த மின்சாரத் தேவை. மிக மிகக் குறைந்த வெப்பத் தேவை. இவைதான் ஜீரோ எனர்ஜி சிஸ்டத்தின் முக்கிய நோக்கங்கள்.மின்சாரத்தைப் பயன்படுத்தி வெப்பத்தையோ குளிர்ச்சியையோ செயற்கையாக உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கான மின்செலவை மிச்சப்படுத்த முடிந்தாலே அது கட்டுமானச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவும்.மின் செலவு குறைக்கப்பட்டாலே கணிசமானசிக்கனம் ஏற்படும். இயந்திரங்களுக்கான தேவைகளைக் குறைத்தால் அவற்றை இயக்குவதற்குத் தேவைப்படும் ஆட்களின் கூலி வகையிலான செலவுகளும் குறையவே செய்யும்.

     ஜீரோ எனர்ஜி சிஸ்டம் வழிமுறையைப் பின்பற்றுவதால் கான்கிரீட்டின் தரமும் ஆயுளும் கூடக் கூடுகின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. தேவைப்படும் மூலப் பொருட்களின் அளவையும் கணிசமாகக் குறைக்கலாம். ஆற்றலுக்கான செலவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆட்கூலி முதல் பெட்ரோலுக்கும் மின்சாரத்திற்கும் ஆகும் செலவுகள் எல்லாமே கணக்கில் வந்துவிடும்.
கிளீனியம் கட்டுமான வேதிப் பொருட்களைத் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனம் பிஏஎஸ்எஃப். இவர்கள் கிளீனியம் ஏசிஈ என்ற வேதிப் பொருளை அளிக்கிறார்கள்.

இதை வாங்கிப் பயன்படுத்துவது ஜீரோ எனர்ஜி சிஸ்டத்திற்கு ஏற்ற வழியாகும்.  கான்கிரீட் ஆரம்ப நிலையிலேயே அதிக வலுக் கொண்டதாக உருவாக்குவதற்கு இது உதவுகிறது. அதனை சூப்பர் பிளாஸ்டிசைசர் என்றும் குறிப்பிடுவார்கள். அது அண்மைக்காலக் கண்டுபிடிப்பு.  பாலி கார்பாக்சிலேட் ஈதர் என்றும் அழைக்கப்படுவது உண்டு.கட்டட பாகங்களை முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வழி செய்யும் பிரி காஸ்ட் தொழில்நுட்ப வேலைகளுக்கு இது பெரிதும் பயன்படும். ஆற்றல் தேவைகளைக் குறைப்பதற்கு இது உரிய வழியாகும்.சிமென்ட் பரப்பின் மீது கிளீனியம் மூலக் கூறுகள் வெகு வேகமாக ஈர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மின்னேற்றம் பெற்ற துகள்கள் ஒன்றையொன்று விலக்கும் நிலை ஏற்படுகிறது. இது தனித் தனி சிமென்ட் துகள்களை நன்கு பரவ வைக்கிறது. இந்தப் பரவல் சீராக இருந்தால் கான்கிரீட் உறுதியடைவது விரைவடையும்.

    சிமென்ட் துகள்களைச் சுற்றிலும் ஒரு போர்வையைப் போல் மூடிக் கொள்ளும் பிளாஸ்டிசைசர்கள் அதற்குள் இருக்கும் ஈரம் அவ்வளவு எளிதில் வெளியேறிவிடாதபடி பார்த்துக் கொள்கின்றன. நீண்ட நேரத்திற்கு ஈரம் நிலை நிறுத்தப்படுவது கான்கிரீட் இறுகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் கிளினீயம், அதிக அளவு சிமென்ட் பரப்பைத் தண்ணீருடன் வினைபுரிய வழி செய்கிறது. இதன் மூலம் சிமென்டும் தண்ணீரும் சேரும் போது உருவாகும் வெப்பம் விரைவில் உற்பத்தியாக நேர்கிறது. இதன் விளைவாக, கான்கிரீட் வெகு விரைவாக உறுதி அடைகிறது.மிகக் குறைந்த வெப்ப நிலைகளிலும், கடுங்குளிர் நிலவும் சூழ்நிலைகளிலும் கூட கிளீனியம் தனது செயல்பாடுகளில் குறை வைப்பதில்லை. ஆகவே இதை எங்கும் பயன்படுத்தலாம் என்றிருப்பதால் கட்டுமானத் தொழிலில் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

ஜீன்ஸ் அணிந்த கட்டிடங்கள் !



மனிதர்களுக்கு ஜீன்ஸ் எப்படி நவநாகரீக உடையோ அதேபோன்று கட்டிடங்களுக்கு க்ளேசிங் படலம் ஜீன்ஸாக காட்சி அளிக்கிறது. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த க்ளேசிங் கண்ணாடி கட்டிடங்கள், அனைத்து ஐடி பார்க்குகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள்,திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள் அனைத்திலும் கிளேசிங் வடிவமைப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளின் கட்டிடங்களில் கிளேசிங் செய்யாத கட்டிடங்கள் காண்பதற்கு அரிது (சமீபத்தில் கட்டப்பட்ட அண்ணா நூலக கட்டிடத்தின் ஒரு பகுதி கூட கிளேசிங் செய்யப்பட்டிருக்கிறது).
மெல்ல மெல்ல குடியிருப்பு கட்டிடங்களுக்கும் கிளேசிங் ஜீன்சை மாட்ட துவங்கியிருக்கிறார்கள் கட்டுநர்கள்.

எதற்காக கிளேசிங் செய்வது?

முதல் தேவை என்று பார்த்தால் மின் செலவைக் குறைப்பது. கிளேசிங் செய்வதற்கும் மின் செலவைக் குறைப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று நினைப்பீர்கள். இருக்கிறது.கிளேசிங் செய்யப்பட்ட கட்டடத்தில் உறுதியான சுவர் பாதுகாப்பாக நிற்கும். என்றாலும் அதன் வழியாக நல்ல சூரிய வெளிச்சம் கட்டடத்திற்குள் நுழையும்.இப்படி இயற்கையாகவே வெளிச்சம் உள்ளே வர வழி செய்து விடுவதால் செயற்கையாக மின் விளக்குகளை எரிய விட வேண்டிய தேவை குறையும். ஆகவே மின் கட்டணமும் இறங்கும். சிக்கனம்.
கட்டடச் சுவர்களை கிளேஸ் செய்தால் வெளிச்சத்திற்கு வெளிச்சமும் கிடைக்கும். தொல்லைகளும் குறையும். மின் சாதனங்களை இயக்க வேண்டிய தேவையும் குறையும்.

கிளேசிங்கின் வகைகள்:

கிளேசிங் வேலைகளை நான்கு விதமாக வகைப்படுத்தலாம். அவை
சிங்கிள் கிளியர் கிளேசிங்,டபுள் கிளியர் கிளேசிங்,லோ ஈ சிங்கிள் கிளேசிங்,லோ ஈ டபுள் கிளேசிங்

சிங்கிள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கைக் கொண்ட கிளேசிங். ஒரே கண்ணாடித் தகட்டைக் கொண்டு கிளேஸ் செய்வது.  இதில் வெளிச்சம் முழு அளவுக்கு அனுமதிக்கப்படும். அதே மாதிரித்தான் வெப்பமும்.வெளி வெப்பம் உள்ளே வரும். உட்புறக் குளிர்ச்சி வெளியேறும். அறைக்குள் கதகதப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் இந்த முறை ஏற்றதாக இருக்கும். வெளிச்சமும் தங்கு தடையில்லாமல் உட்புக இது பொருத்தமானது.

டபுள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கு கிளேசிங்கை விடச் சற்று மேலானது. வெப்பத் தடுப்புத் தன்மையை உள்ளடக்கியது. இதற்குரிய விளக்கமும் பெயரில் இருந்தே பெறத் தக்கது. இரண்டு அடுக்குகளாகக் கண்ணாடிப் படலங்களை அமைக்கும் முறை இது.இவ்வாறு அமைக்கப்படும் இரண்டு கண்ணாடி அடுக்குகளுக்கு இடையில் காற்று இடம் பெற்றிருக்கும். கண்ணாடி, காற்று, கண்ணாடி என்று வரிசையில் வெப்பம் கடந்து வர, போக வேண்டிய பாதை அமையும். ஆகவே அறைக்குள் வெப்பம் வருவதாக இருந்தாலும் குளிர்ச்சி வெளியேற நினைத்தாலும் இந்தப் பாதை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

கண்ணாடிப் பரப்புகளுக்கு இடையில் இருக்கும் காற்று இந்தப் போக்கை மட்டுப்படுத்தும். கட்டுப்படுத்தும். வெப்ப இழப்பு தடுக்கப்படும். ஒற்றை கிளேசிங்கில் இந்தப் பயன் கிடைக்காது.இரட்டை அடுக்கு கிளேசிங் இருக்குமானால் கண்களுக்கு எளிதாகப் புலப்படும் ஒளி அலைகளை உட்புக அனுமதிப்பது இயல்பாக நடக்கும். இதனால் அறைகளுக்குள் நல்ல பார்வைத் தெளிவு உண்டாகும். குளிர்ப் பகுதிகளில் அறைகளுக்குள் இயற்கையாகவே கதகதப்பை ஏற்படுத்த இது ஏற்ற வழியாக இருக்கும்.

லோ ஈ சிங்கிள் கிளேசிங்

உட்புகுந்த சூரியக் கதிர்கள் மீண்டும் வெளியேறுவதைத் தடுக்க இந்த முறை பயன்படும். ஒற்றை, இரட்டை கிளேசிங் முறைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். நல்ல வெளிச்சமும் வெப்பப் பண்புகளும் கிடைக்கும். தேவைப்படாத ஒளி அலைகளைத் தடுக்கவும் முடியும்.அகச்சிவப்புக் கதிர் வீச்சினால் ஏற்படும் அபாயங்களையும் தடுக்கலாம். வீட்டுக்குள் வெயில் விழுந்தாலும்அதனால் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

லோ ஈ டபுள் கிளேசிங்

கண்ணாடித் தகடுகளின் மேல் தனிப் பூச்சுக்களை ஏற்படுத்துவார்கள். கண்ணாடித் தகடுகளுக்கு இடையில் கிரிப்டான் அல்லது ஆர்கன் முதலிய வாயுக்களை நிரப்புவார்கள். இதுதான் இந்த வகை கிளேசிங்கின் தனித்துவம். இது குளிர்காலத்தில் குளிர் இழப்பையும் வெயில் காலத்தில் வெப்ப அதிகரிப்பையும் தடுக்கும்.
என்றாலும், கிளேசிங் முறை பறவைகளுக்கு எதிரானது என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆம், கண்ணா டியில் பிரதிபலிக்கும் வானத்தின் பிம்பத்தைப் பார்த்து நேரே வந்து முட்டிக்கொள்கின்றனவாம் பறவைகள். இதற்கு ஏதேனும் ரிஃப்ளெக்டர் களை வைத்தால் நல்லது.



காண்ட்ராக்டர்களுக்கு கை கொடுக்கும் கான்கிரீட் கித்தான் !



தமிழில் கான்கிரீட் கித்தான் என அழைக்கப்படும் கான்கிரீட் கேன்வாஸ் என்கிற பொருளானது நம்மவர்களுக்கு ஒரு வேளை புதிய பொருளாக இருக்கும். ஆனால், 2004 ல் இருந்து பிரிட்டனில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு பொறியியல் மாணவர்கள் இதனைக் கண்டுபிடித் தார்கள். கான்கிரீட் கேன்வாஸ்  என்ற பெயரிலேயே ஒரு நிறுவனத்தையும் இவர்கள் 2005 இல் ஆரம்பித்தார்கள். இந்த நிறுவனம் கான்கிரீட்டால் ஆகிய கித்தான்கள். கூடாரங்களை அமைக்கத் தொடங்கியது.
இது வழக்கமான கித்தானின் வடிவத்துடன்தான் இருக்கும். நீட்டலாம். சுருக்கலாம் .சுருட்டலாம்.விரிக்கலாம். பரப்பலாம். வெட்டலாம். ஒட்டலாம். இந்த வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொண்ட பின் அந்தக் கித்தான் துண்டுகளின் மேல் தண்ணீரைத் தெளித்தால் போதும். இறுகிக் கெட்டியாகிவிடும்.

இந்தக் கான்கிரீட் கித்தானை எந்த வகைக் கால்வாயிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. அகலம் குறைவான கால்வாய் என்போம். கவலையே இல்லை. கான்கிரீட் கித்தானைக் கால்வாயின் நீளவாக்கில் பதித்துவிட வேண்டும். கால்வாய் அகலமானதாக இருக்கிறதா?  ரொம்ப நல்லது. அகல வாட்டத்தில் பதிக்க முடியும். கித்தான் துண்டுகள் இணைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறதா? அப்போதும் சிக்கல் இல்லை.
கித்தானின் முனைகளை ஒன்ஷூன் மேல் ஒன்று படியும் விதத்தில் வைத்துக் கொண்டு தண்ணீரைத் தெளித்தால் போதும். இந்த இடம் நன்றாக ஒட்டிக் கொண்டுவிடும். கால்வாய்களின் ஒரு பக்கக் கரையில் ஆரம்பித்துச் செங்குத்தாகக் கீழே கொண்டு போய் அடிப்பரப்பில் விரித்து மறு
க ரையில் மீண்டும் செங்குத்தாக மேலே
படியுமாறு கித்தானைப் பதிக்க வேண்டியதுதான். கால்வாயின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மிகச்சரியாக ‘ப’ வடிவில் இருக்க வேண்டும் என்பதில்லை. இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளைக் கொண்டதாக இருந்தாலும் கித்தானை அதற்கேற்ப நீட்டி, மடக்கி, அழுத்திப் பொருத்தி விட முடியும்.
இந்த வேலைகள் முடிந்ததும் கித்தானின் மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். அது கெட்டியாகி உறுதி பெற ஆரம்பிக்கும். இரண்டு மணி நேரம் வரை அத்தகைய கித்தானின் மேல் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொள்ள முடியும். இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் கித்தான் கடினப்பட்டு 80 சதவீத அளவுக்கு உறுதியைப் பெற்றுவிடும்.
வேண்டியஅளவில் தேர்ந்தெடுக்கக் கான்கிரீட் கித்தான் தயார்நிலையில் கடைகளில் கிடைக்கிறது. சுருள் வடிவில் இதனை வாங்கிக் கொள்ளலாம். தேவைப்படும் அளவுகளுக்கேற்ப வெட்டிக் கொள்ளவும் முடியும். ஒரு மீட்டர் குறுக்களவு கொண்ட சுருள் வடிவில் இதனை விற்பனைக்கு விடுக்கிறார்கள். வழக்கமான அகலம் 1.1 மீட்டராக இருக்கும். 4.5 மீட்டர் நீளம் கொண்ட சுருளாகச் சுருட்டி வைத்திருப்பார்கள். இத்தகைய சுருள் ஒன்ஷூன் எடை 60 கிலோ வரை இருக்கும்.
பெரிய அளவிலான பயன்பாட்டிற்குத் தேவைப்படுகிறது என்றால் 200 மீட்டர் நீளம் கொண்ட சுருளைத் தேர்ந்தெடுக்கலாம். இது ஒன்றரை டன் வரையிலான எடை கொண்டதாகக் காணப்படும். அடுத்துக் கவனிக்க வேண்டிய முக்கியமான அளவு, கான்கிரீட் கித்தானின் கனம். தடிமன். இது
5 மி.மீ, 8 மிமீ மற்றும் 13 மி.மீ ஆகிய அளவுகளில் கிடைக்கிறது.
இட, எடை வசதி
கான்கிரீட் கித்தான் ஒரு ஆள் எளிதாகத் தூக்கிச் செல்லக் கூடிய எடை உள்ள அளவில் சுருட்டப்பட்டுக் கிடைக்கிறது. வேலை நடக்க வேண்டிய இடம் எளிதில் அணுக முடியாததாக இருக்கிறதா? கன ரக இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல இயலாதா? ஒரே ஆள் தூக்கிச் செல்லக் கூடியஅளவிலான கான்கிரீட் கித்தான் சுருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.அளவில் பெரிய வேலை. நல்ல போக்குவரத்து வசதி. இத்தகைய சூழ்நிலைகளில்
அதிக அகலம், நீளம், எடை கொண்ட கான்கிரீட் கித்தான்களைப் பயன்படுத்தலாம்.
கலவை போட வேண்டிய அவசியமே இல்லை. கலவை போடுவதற்குத் தேவை இல்லை என்பதால் கலக்க வேண்டிய பொருட்களை எடைபோட்டோ, கன அளவைக் கணக்கிட்டோ அளந்து போட அவசியமே இல்லை. எப்போதும் தண்ணீர் தேங்கியே இருக்கக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் தப்பில்லை. தண்ணீருக்கு அடியிலேயேயும் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம். அவ்வளவு ஏன்..கடுமையான கடினநீர், உப்புத் தண்ணீர், கடல் தண்ணீரிலும் கூடக் கான்கிரீட் கித்தான் திறம்பட வேலை செய்யும்.
படு வேகம்
தண்ணீர் தெளிக்கப்பட்டு இரண்டு மணி நேரம் வரை கான்கிரீட் கித்தானில் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிடலாம். அதற்குப்பின் ஒரு நாள் இடைவெளி விட்டால் போதும். எண்பது சதவீதம் வரை உறுதிப்பட்டுவிடும். வேக வேகமாகக் கெட்டிப்பட வேண்டும் என்றாலும் கொஞ்சம் மெதுவாகவே இறுகினால் நல்லது என்று நினைத்தாலும் சரி..கான்கிரீட் கித்தான் எதற்கும் ஏற்றதாகத் தயாரித்துத் தரப்படும். தேவை எப்படி என்பதைத் தெரிவித்தால் போதும்.
மாசுக்கே இடமில்லை
கான்கிரீட் கித்தானால் சுற்றுச் சூழல் மாசுபடும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. கான்கிரீட் கித்தான் எடை குறைவானது . இதன் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் உழைப்பிலும் கரியமில வாயு உருவாக்கப்படும் அபாயம் இல்லை. இதனால் புவி வெப்ப மயமாகும் ஆபத்தும் இல்லை. பலவிதத் தேவைகளுக்கான கான்கிரீட் கித்தானைத் தயாரிப்பதில் வழக்க
மான கான்கிரீட்டுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களில் 95% வரை மிச்சப்படுத்தலாம்.கான்கிரீட் கித்தானில் காரத்தன்மை மிக மிகக் குறைவு. தண்ணீரால் கரைக்கப்பட்டு அரித்துச் செல்லப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சத் தேவையில்லை. மேலும் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்துவதற்குப் பெரிய இயந்திரங்களோ, சாதனங்களோ, மின் சக்தியோ தேவைப்படாது.
கான்கிரீட் கித்தானை எந்த வடிவத்தின் மீதும் கச்சிதமாகப் படியும்படி போர்த்தலாம். பதிக்கலாம். மூடலாம். சந்து பொந்துகளையும் எளிதாக அடைக்கலாம். இரட்டை வளைவுகளைக் கொண்ட வடிவங்களின் மீதும் கச்சிதமாகப் பொருத்தலாம்.இன்னும் சரியாகப் படியாமல் இருக்கிறது என்கிற சந்தேகம் வந்தால் அந்தப் பகுதியை மட்டும் வெட்டி அப்புறப்படுத்திவிட்டு வேறு துண்டைப் பொருத்தலாம். இதற்குச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் கைக் கருவிகளே போதுமானவை.
கான்கிரீட் கித்தான் உறுதியானது. இதில் வெடிப்புகள், விரிசல்கள் ஏற்படாது. சம்
மட்டியால் அடித்தாலும் அடியை வாங்கிக் கொண்டு படிமான
மாகவே இருக்கும். கிழிசல், துளைகள் போன்ற தொல்லைகளும் ஏற்படாது. எந்தத் தேவைக்காக எடுத்துக் கொள்கிறோமோ அந்தத் தேவை நிறைவேறவில்லை என்கிற குறை உருவாகாது.
கான்கிரீட் கித்தான் எந்தவொரு வேதிப் பொருளாலும் பாதிக்கப்படாது. பருவ நிலை
மாற்றங்களால் சிதைவடையாது. புறஊதாக்கதிர்களால் சேதமடையும் போக்கும் காணப்படாது.எனவே, கான்கிரீட் கித்தான் நீண்ட காலம் பழுதின்ஷூ உழைக்கும்.
கான்கிரீட் கித்தானின் ஊடாகத் தண்ணீர் உட்புகாது. இதன் ஒரு பரப்பில் பாலிவினைல் க்ளோரைட் படலம் பொருத்தப்பட்டிருப்பதால் தண்ணீர்க் கசிவு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. வேதிப் பொருட்களாலும் அரிப்பு ஏற்படாது.
கான்கிரீட் கித்தானில் தீப்பிடிக்காது. இதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பரப்பின் மேல் வேறு வகையில் தீ பற்ஷூ எரிந்தாலும் அதன் சுவாலைகளைக் கான்கிரீட் கித்தான் பரவ விடாது. புகை உருவாவதற்கும் வாய்ப்புக் குறைவு. தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்கள் வெளியேற்றப்படுமோ என்றும் அஞ்சத் தேவையில்லை. ஐரோப்பியத் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கேற்பக் கான்கிரீட் கித்தான் தயாரிக்கப்படுகிறது.
கான்கிரீட் கித்தானை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
சுரங்கங்களை வெட்டிக் கொண்டு செல்லும்போது மேல், பக்கவாட்டுச் சுவர்கள் சரிய ஆரம்பிப்பது உண்டு. இதை முட்டுக் கொடுத்துத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.சரிவுகளைத் தடுக்கவும் முட்டுக்கொடுக்கும் தூண்களை உருவாக்கவும் கான்கிரீட் கித்தான் பெரிதும் கை கொடுக்கும்.
ஓரிடத்தில் கலவை கலக்க வேண்டும். பொருட்களைக் கொட்டி வைக்க வேண்டும். காய விட வேண்டும். வெறும் தரையில் போட்டால் மண் ஒட்டிக் கொள்ளும்.இந்த வேலைகள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே அந்த இடத்தில் நடத்தப்பட வேண்டும்.இது போன்ற தேவைகளுக்குக் கான்கிரீட் கித்தானைக் கொண்டு சீரான சமதளத்தைக் கொண்ட பரப்பை வெகுவிரைவில் அமைத்துவிடலாம். குறைந்த செலவில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளலாம். தேவை முடிந்ததும் அப்புறப்படுத்திவிடலாம்.
குடிநீரைக் கொண்டு செல்வதற்குப் பல விதங்களில் பைப் லைன்களை அமைப்பார்கள். இந்தக் குழாய்ப் பாதைகள் தரையோடு தரையாக அமைக்கப்படுவதும் உண்டு. தரைக்குக் கீழ் பள்ளம் தோண்டிப் பதிக்கப்படுவதும் நடக்கும்.இப்படி எந்த வகையில்அமைக்கப்பட்ட குழாய்ப் பாதையாக இருந்தாலும் அந்தக் குழாய்களுக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாத வகையில் கான்கிரீட் கித்தான் கொண்டு மூடலாம். இரும்புக் குழாய்களையும் கூடக் கான்கிரீட் கித்தானால் போர்த்திப் பாதுகாக்கலாம். தற்போது இரும்புக் குழாய்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கான்கிரீட் கலவையைக் கலந்து போடும் முறைதான் பெரிய அளவில் பின்பற்றப்படுகிறது. கான்கிரீட் கித்தான் இந்தத் தேவையை வெகுவாகக் குறைத்துவிடும்.

சிலகுழாய்கள் தண்ணீருக்கடியில் பதிக்கப்பட வேண்டி இருக்கும். பிவிசி முதலியவற்றால் ஆகிய குழாய்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதந்தபடி இருக்க முயல்வதும் நடக்கும். அவ்வாறு மிதக்கும் நிலையில் இருக்கும் குழாய்களைத் தண்ணீருக்கடியில் தரையோடு ஒட்டிப் பதிய வைக்கவும் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம்.
பல வகையான கேபிள்களைத் தரைக்கடியில் புதைத்து எடுத்துச் செல்கிறார்கள். கான்கிரீட் கித்தானைக் கொண்டு மூடலாம்.. சில இடங்களில் கேபிள்களை மண் ஓடுகளால் பாதுகாப்பாக மூடி இருப்பார்கள். அத்தகைய ஓடுகள் உடைந்துவிடாமல் இருக்க வேண்டுமானால் அவற்றைக் கான்கிரீட் கித்தான் கொண்டு மூடுவது சிறந்தது.
சரிவான தளங்களில் மனிதர்கள், விலங்குகள், வாகனங்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். இம்மாதிரியான தேவைகள் எல்லாவற்றிற்கும் கான்கிரீட் கித்தான் பொருத்தமான தேர்வாக அமையும்.சிறு அணைக்கட்டுகளின் சுவர்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

கரைகளில் வேதிப் பொருட்களால் அரிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறதா? அதையும் தடுக்கக் கான்கிரீட் கித்தான் பயன்படுத்தப்படலாம். கான்கிரீட்டால் சுவர் எழுப்ப வேண்டி  இருப்பதைத் தவிர்க்கலாம். இதனால் கணிசமான அளவில் பொருட் சிக்கனம் ஏற்படும்.காண்ட்ராக்டர்களுக்குக் கை கொடுக்கும் கான்கிரீட் கித்தான்கழிவு நீர்க் கால்வாய்களின் கரைகளை வலுப்படுத்திக் கசிவில்லாமல் செய்ய வேண்டும். இந்த வேலைகளுக்கான ஒப்பந்தத்தை எடுத்திருக்கிறீர்களா? வழக்கமான முறையில் கான்கிரீட் கலவை தயாரித்துக் கொட்டும் வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அதற்குப் பதிலாகக் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம்.

     இது சிக்கனமானது. விரைவாக வேலைகளை முடிக்க உதவுவது. பயன்பாட்டில் எந்தக் குறைக்கும் இடம் கொடுக்காதது. நீடித்து உழைப்பது.நீளவாக்கில் கரைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவைகளுக்கு வழக்கமான கான்கிரீட் முறையை விடக் கான்கிரீட் கித்தான் முறை பெரிதும் இலாபகரமானது.100 ச. மீ பரப்பிற்குக் குறுக்காக லைனிங் செய்ய வேண்டிய வேலையா? கான்கிரீட் லைனிங் கொடுக்க ஆகும் கலவைப் பொருள், ஆட்கூலி ஆகியவற்றைக் கணக்குப் போடுங்கள்.  ஒரே நாளில் மூன்றே மூன்றுஆட்களை வைத்துக் கொண்டு இந்த வேலையைக் கான்கிரீட் கித்தான்மூலம் முடித்துவிடலாம். ஒப்பிட்டுப் பாருங்கள்.பாயைச் சுருட்டி எடுத்து வருவதைப் போலவே கான்கிரீட் கித்தானைக் கொண்டு வந்துவிடலாம். இதைத் தேவைப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக விசேஷஷ  வாகனம் எதையும் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

வேதிப் பொருட்களால் அரிப்பு ஏற்படும் என்பதும் கிடையாது. பருவ நிலை மாற்றங்களை நன்றாகவே தாக்குப் பிடிக்கும்.தீப்பற்றும் தன்மை அறவே இல்லை.வெடிப்புகள் ஏற்படாது . மோதல்களையும் அதிர்ச்சிகளையும் தாக்குப் பிடித்து நிற்கும்.
230 கிலோ எடை கொண்ட கான்கிரீட் கித்தானை எடுத்துக் கொண்டால் 172 சதுர அடிப்பரப்பை மூடலாம். இதில் கூரைப் பகுதி 16 சதுர மீட்டர் உடையதாக இருக்கும். செலவு? வழக்கமான செலவைக் காட்டிலும் மூன்றில் ஒருபகுதிக்கும் குறைவாகவே முடித்துவிடலாம்.
கால்வாய்க் கரைகளையும் தளத்தையும் பாதுகாக்கும் விதத்தில் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம். விரித்துப்பரப்பிப் பொருத்திவிட்டால் போதும். தண்ணீர்க் கசிவு, ஊறல் என்று எந்தப் பிரச்சனையும் இருக்காது.

வழக்கமான முறையில் இந்த வேலைகளைச் செய்ய பள்ளம் எடுக்க வேண்டும். பலகை அடைக்க  வேண்டும் . கலவை போட வேண்டும். படிய விட வேண்டும்.நீராற்ற வேண்டும். கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தினால் இது மாதிரியான தேவைகள் எதுவும் இல்லை. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வேலைகளை முடித்துவிடலாம். இதற்கென்று தனிக் கருவிகள் எதுவும் தேவைப்படாது. 30 மீட்டர் நீளம் கொண்ட ஒரு கழிவு நீர்க்கால்வாய் வேலையை வெறும் முக்கால் மணி நேரத்தில் முடித்துவிடலாம்.
கணக்குப் போட்டுப்பார்த்தீர்கள் என்றால் வழக்கமான முறையில் கான்கிரீட் கலவையைத் தயாரித்துப் பயன்படுத்துவதைக் காட்டிலும் தயார் நிலையில் கிடைக்கும் கான்கிரீட் கித்தானை வாங்கிப் பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் விரும்பத்தக்கதாக இருக்கும்.

      வழக்கமான முறையில் ஏற்படுத்தப்படும் கான்கிரீட் பாதுகாப்பு என்போம். இதற்காக 100 மி.மீ கனம் கொண்ட கான்கிரீட் இடப்படுவதாக வைத்துக் கொள்வோம்.இதே அளவு பாதுகாப்பை வெறும் 8 மி.மீ கனம் கொண்ட கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றுவிடலாம்.கான்கிரீட் கித்தானில் வீணாவது என்று எதுவும் இல்லை. அப்படியே வீணாகிறது என்றாலும் அது மிக மிகக் குறைந்த அளவுக்கே இருக்கும். மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.கான்கிரீட் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் பொருட்களைக் காட்டிலும் பத்தில் ஒரு பங்கு பொருட்களைக் கொண்டே கான்கிரீட் கித்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
கட்டுமானத்துறையில் சகலருக்கும் பயன்படக்கூடிய ஒரு தோழமைப் பொருளான கான்கிரீட் கித்தானைப் பற்றி  மேலும் அறிந்துக் கொள்ளுங்கள்.

இரும்பு நண்பன் இன்டர் ஆர்க் !


கான்கிரீட்டால் ஒரு கட்டுமானத்தை உருவாக்க வேண்டி இருக்கிறது என்போம். அந்த இடத்தில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களால் ஏற்படும் இரைச்சல், தொல்லைகள் கணிசமாக இடம் பெறும். அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும் தடை ஏற்படும். வேலைகள் நடந்து முடிய நீண்ட காலம் ஆகும். எப்போதுதான் இந்தத் தொல்லை முடிவுக்கு வருமோ என்று ஒவ்வொருவரும் கரித்துக் கொட்டுவார்கள்.

    இன்டர் ஆர்க் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தினால் இதற்கெல்லாம் இடமே இருக்காது. எல்லாவற்றையும் தயாரிப்பு ஆலையிலேயே துல்லியமாகத் தயாரித்துவிடுவார்கள். தரம் உறுதிப்படுத்தப்படும். எடுத்து வந்து கட்டுமான இடத்தில் பொருத்த வேண்டியதுதான். இப்படிப் பொருத்தும் வேலையும் எளிதானதே. எந்தெந்தப் பகுதிகளில் இணைப்புகளை ஏற்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் முன்னதாகவே திட்டமிட்டபடி துளைகளை உருவாக்கி இருப்பார்கள்.அது அதற்கு நேராக வைத்து முடுக்க வேண்டியதுதான். வெகு விரைவில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களைக் கொண்டு வேலைகளை முடித்து விடலாம். கட்டுமானமும் கச்சிதமாக அமையும். மற்ற தொந்தரவுகள் இருக்கவே இருக்காது.

    உயரம் அதிகமான கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்று நினைக்கும்போதே அதன் அடித்தளம் அதற்கு ஏற்ற மாதிரி அமைய வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பிப்பீர்கள். வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்? உயரமான கட்டடம் என்றால் வலுவான அடித்தளம் அமைப்பார்கள்.இதைப் பெரும்பாலானவர்கள் கான்கிரீட்டினாலேயே உருவாக்குவார்கள்.

கலவை கனமாக இடப்படும். ஒட்டுமொத்தமாக ஒரே கட்டியைப் போல் உருவாக்கப்படும். ஒரு முறை இப்படி அமைத்துவிட்டால் காலத்திற்கும் அப்படியே கிடக்க வேண்டியதுதான்.  கட்டடத்தில் ஏதாவது மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அடித்தளத்தில் கை வைக்க முடியாது.கட்டடத்திற்கு வலுவூட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதைச் செய்வதில் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். கூடுதலாக இன்னும் நான்கு மாடிகளைக் கட்டலாம் என்று திட்டமிடுவதும் இயலாமல் போகும்.ஆனால் இரும்பினாலான அடித்தளம் என்றால் இந்தப் பிரச்சனையே இல்லை. எளிதில் மாற்றலாம். சேர்க்கலாம். நீக்கலாம். வலுவாக்கலாம். கூடுதல் தளங்களைக் கட்டலாம். எதுவும் சாத்தியம். இரும்பிலான அடித்தளச் சட்டங்களின் எடை குறைவாகவே இருக்கும். தாங்கும் திறன் அதிகமாகக் கிடைக்கும்.

இன்டர் ஆர்க் மூலம் இதெல்லாம் கிடைக்கும்இன்டர் ஆர்க் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் கட்டுமான இரும்பைப் பயன்படுத்தினால் உங்களுக்கு எவ்வளவோ ஆதாயங்கள் கிடைக்கும். அவை:

    கட்டுமானப் பொருளின் கன அளவு, எடை ஆகியவற்றுக்கும் கட்டடத்தின் வலிமைக்கும் உள்ள விகிதம் கணிசமாக அமையும்.கட்டுமான வேலைகளை வெகுவிரைவாக முடித்துவிடலாம். இதனால் உங்களுக்கு மிச்சமாகும் நேரம் அத்தனையும் பணம்தான்.வலிவூட்டப்பட்ட கான்கிரீட்டால் ஒரு கட்டடத்தைக் கட்டி முடிக்க எவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்பதைப் பாருங்கள். அதே கட்டடத்தை இன்டர் ஆர்க் பயன்படுத்திக் கட்டிப் பாருங்கள். இந்த வகையில் உங்களது கட்டடம் வெகு விரைவில் பயன்பாட்டிற்குத் தகுந்ததாக ஆகிவிடும்.

முன்னதாகவே அதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவீர்கள். கட்டடத்திற்காக ஈடுபடுத்திய  முதலீட்டின் மீதான பலனை முன்னதாகவே பெறத் தொடங்கி விடுவீர்கள். வட்டி, மூலதன முடக்கம், வாடிக்கையாளர்களின் நச்சரிப்பு போன்ற பல தொல்லைகளுக்கு விடை கொடுத்து விடலாம். இதனால் கிடைக்கும் மன அமைதிக்கு மதிப்புப் போட
முடியுமா? சலனமற்ற மனம் இருந்தால் இன்னும் பல வேலைகளை எடுத்துச் செல்ல முடியும் இல்லையா?

சட்டக் கணக்கு எப்படி?

கட்டுமானத்தின் உள்கூடாக நிற்கும் சட்டங்களைக் கொஞ்சம் ஆராயுங்கள். இந்தச் சட்டங்களைக் கான்கிரீட்டால் அமைத்தால் அவற்றின் எடை எவ்வளவு வரும் என்பதைக் கணக்கிடுங்கள். அதே சட்டங்களை இன்டர் ஆர்க் இரும்பினால் அமைத்துப் பாருங்கள். எவ்வளவு வித்தியாசம் வருகிறது என்பதை உணருங்கள்.கான்கிரீட்டிற்கும் இரும்பிற்கும் உள்ள எடை வித்தியாசம் எக்கச்சக்கமாக இருக்கும். அப்படியானால் உங்களது கட்டுமானப் பொருளுக்கான விலையும் அந்த அளவுக்கு வேறுபடும். இன்டர் ஆர்க் உங்களுக்கு மிகப் பெரிய சிக்கனத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இட வசதிக்கு இதுதான் ஏற்றது?

அலுவலகப் பயன்பாட்டிற்காகக் கட்டப்படும் கட்டடங்களில் குறுக்கே தூண்களே இருக்கக் கூடாது என்றுதான் விரும்புவார்கள். இம்மாதிரியான தேவைகளை எளிதில் நிறைவேற்றுவதற்கு இன்டர் ஆர்க்தான் கை கொடுக்கும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ப வரும் பெரிய கலைக் கூடங்களையும் இசை அரங்குகளையும் அமைக்க இதுதான் ஏற்ற கட்டுமானப்பொருளாக விளங்கும்.
முன்னதாகவே அனைத்தையும் திட்டமிட்டுத் தயாரிக்க இன்டர் ஆர்க்கில் வசதி கிடைக்கிறது. இதனால் வீண் விரையங்களை
முற்றிலுமாகத் தவிர்க்கலாம். எவ்வளவு கட்டுமானப் பொருள் தேவைப்படும் என்பதைத் துல்லியமாகக் கணக்குப் போடலாம். அந்த அளவுக்கு மட்டும் கொள்முதல் செய்தால் போதும்.

பல அடுக்குகளைக் கொண்ட கட்டுமானங்களை வடிவமைப்பதை எளிதாக்குவதற்கும் இன்டர் ஆர்க் பெரிதும் பயன்படும். வடிவமைப்பு நிலையிலேயே சிக்கனம் ஆரம்பித்துவிடும். கட்டுமானப் பொருட்களை வாங்குவதற்காகக் கடனில் மூழ்குவதோ, இருப்பு வைக்கும் தேவைகளில் முதலீட்டை முடக்குவதோ நடக்காது.

இரும்புக் கட்டுமானப் பொருட்களை உருவாக்குவதில் எத்தனையோ நவீன உத்திகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. அதிக வெப்ப நிலையில் உருட்டித் தயாரிக்கப்படும்  பகுதிகள் உறுதியான, விரைவான கட்டுமானத்திற்கு வழி வகுக்கின்றன. உயர்ந்த தரம் கொண்டவையாகத் தயாரிக்கப்படும் பாகங்கள் கட்டடத்தின் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கின்றன.
தூண்கள்,  தாங்கிகள்,  உத்தரங்கள், சட்டங்கள் போன்றவற்றின் வடிவமைப்பில் புதுப்புது உத்திகளைப் பயன்படுத்துவதால் கட்டு
மானப் பொருட்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும் போக்கைத் தவிர்க்கலாம்.

குறுக்குச் சுவர்களையும் மிகுந்த உறுதி கொண்டவையாக அமைக்கலாம். இதனால் ஒட்டு மொத்தக் கட்டமும் அதிக உறுதியுடன் விளங்கும். காற்றினால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிக்கும் விதத்தில் கட்டுமானங்களை உருவாக்குவது எளிதாகும். கட்டடத்தின்
உயரம் அதிகமாக ஆக, ஆக எதிர்கொள்ள வேண்டிய காற்றின் வலிமையும் அதிகமாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கான்கிரீட் இடும் வேளைகளில் கவனமாக இருக்கிறீர்களா ?




கட்டுமானத் தொழிலில் கான்கிரீட் இடுவதற்கு முன், இடும்போது , இட்ட பின் கவனத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்ணில் விளக் கெண்ணெய் ஊற்றிக்கொண்டு செய்ய வேண்டும்.
கான்கிரீட் இடுவதற்கு முன்பிருந்தே பல பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்து விட வேண்டும். எந்தெந்தக் கட்டடங்களில் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படக் கூடும் என்பதை ஆராய வேண்டும். அவற்றைத் தடுப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாளைக்குக் கான்கிரீட் போட இருப்பீர்கள். பலகை அடைப்பு வேலைகள் எல்லாம் முடிந்திருக்கும். ஆங்காங்கே மரக் கால்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் ஒரு சித்தாள் வருவார். ஏணியைப் பலகையின் மேல் சார்த்துவார். கிடுகிடுவென்று மேலே ஏறுவார். ஏணி தடதடவென்று சரிய நேரலாம்.
எனவே, கான்கிரீட் இடும்போது மேற்கொள்ள வேண்டிய கீழ்க்கண்ட எச்சரிக்கை எண்களை ஆராய்வோமா?

எச்சரிக்கை எண்1: தேவையில்லாமல் கண்டபடி, பலகைகளின் மேல் ஏறுவதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை எண்2: உயரத்தில் இருந்து வேலையாட்கள் கீழே இருப்பவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும். விளிம்புகள், ஓரங்கள், முனைகள் பாதுகாப்பாகத் தடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லாத
உயரமான தளங்களில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதோ அரட்டை அடிப்பதோ கூடவே கூடாது.

எச்சரிக்கை எண் 3:பலகை அடைப்பு அதன் முழுப் பரப்பிலும் முறையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதிக்கவேண்டும். எங்காவது ஓரிடத்தில் பலகை பிளந்து கொண்டு நிற்கலாம். பலவீனமாக ஆகி இருக்கலாம். சந்துகள் சரிவர அடைக்கப்படாமல் இருக்கலாம். அத்தகைய தளத்தின் மேல் கவனக்குறைவாகவோ அவசரமாகவோ நடக்க நேர்பவர்கள் தளத்தைப்
பொத்துக் கொண்டு கீழே விழ நேரும்.

எச்சரிக்கை எண்4: பல பேர் தாங்கள் நடக்கும் போது காலை எங்கே வைக்கிறோம் என்பது பற்றிக் கவலையே படமாட்டார்கள். இதனால் தடுக்கிவிழுவதும், சறுக்கி விழுவதும் சகஜமாகிவிடும். வெறும் பரப்பில் விழுந்தாலும் பரவாயில்லை. முனைகள் தாறுமாறாக நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிக் கட்டுமானத்தின் மேல் விழுந்து வைத்தால்? அவ்வளவுதான். கவனக்குறைவாக நடந்து சென்று கம்பிகளின் மேல் இடித்துக்கொள்வதால் ஏற்படும் காயங்களும் விபத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டியவை.

எச்சரிக்கை எண்5: பலகை அடைக்கப்படுவது அதன் மேல் கொட்டப்படும் கான்கிரீட் கலவையின் பளுவைத் தாங்குவதற்காகத்தான். கொட்டும் வேலை நடக்கும் போது அந்தத் தளத்தின் மேல் நிற்கக் கூடிய ஆட்களின் பளுவையும் தாங்கியாக வேண்டும். அதற்குமேல் சில கருவிகள், சாதனங்கள். போதும். எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? இது வெறும் மரப்பலகை இல்லை..இரும்புத் தகடுகளால் ஆன அடைப்பு என்கிற நினைப்பே பலருக்கும் அசட்டுத் துணிச்சலை ஏற்படுத்திவிடும்.

எச்சரிக்கை எண் 6: சில கட்டுமானப் பகுதிகளின் வடிவம் சீரற்றதாக இருக்கும்.வளைந்து நெளிந்து செல்வதாக இருக்கும். குறுகலான வழி மட்டுமே கிடைக்கும். மேலே தலையில் இடிக்கும். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் தடுக்கி விழ வாய்ப்பு ஏற்படும். அத்தகைய இடங்களில் அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க முனையக் கூடாது. அவசரம் ஆபத்தில் முடியும்.

எச்சரிக்கை எண் 7: பலகை அடைப்பு வேலைகளில் நல்ல கவனத்துடன் செயல்படுகிறவர்களும் இருப்பார்கள். அவர்களும் சில இடங்களில் கோட்டை விட்டுவிடுவார்கள். பழுதாகி உள்ள, பலவீனமான பகுதிகளைச் சரி செய்ய முனைவார்கள். ஆனால், அதற்குப் பயன்படுத்தும் பாகங்கள் விசயத்தில் தவறு செய்து விடுவார்கள். பொருத்தப்பட்ட பாகங்கள் பலமிழந்து போக நேரலாம். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுவிடலாம். செய்வன திருந்தச் செய் என்பது இங்கு மிக மிக முக்கியம்.

எச்சரிக்கை எண் 8: கூரான கம்பியா? தவிர்க்கவேண்டும். இற்றுப் போன கம்பியா? இடம் கொடுக்கக் கூடாது. கூரான முனைகளைக் கொண்ட கம்பிகள் எங்காவது நீட்டிக் கொண்டு இருக்கின்றனவா? இவை குத்திக் கிழித்துவிடக் கூடும். இரத்தக் காயங்களை ஏற்படுத்தக் கூடும்.  அதே போல், துருப்பிடித்து இற்றுப் போய் நிற்கும் கம்பிகள் ஒடிந்து விழுந்துவிட நேரும். இவற்றை எல்லாம் முன்னதாகவே சோதித்து அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

எச்சரிக்கை எண் 9: என்னதான் அவசரம் என்றாலும் அப்போதும் பொறுமை வேண்டும். இயந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தினாலும்  கூடப் பெரும்பாலான வேலைகளுக்கு மனித உடல் உழைப்பையே நம்பி இருக்க வேண்டி உள்ளது. மனிதர்கள் இயந்திரங்களல்ல. அவர்களுக்குக் களைப்பு, சோர்வு, பசி, தாகம் ஏற்படுவது இயற்கை. சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை, கிடுகிடுக்க வைக்கும் குளிர், ஆளைச் சாய்க்கும் காற்று, மூச்சை அடைக்கும் தூசி, காதைப் பிளக்கும் ஓசை போன்ற சூழ்நிலைகளிலும் கூடக் கட்டாயமாக வேலை செய்தே ஆக வேண்டும் என்று தொழிலாளர்களைப் போட்டு வாட்டி வதைக்கும் விதத்தில் வேலை வாங்கினால் பல விபத்துக்கள் கண்முன் நிகழ்ந்து முடிந்துவிடும். இரக்கம், மனிதாபிமானம் கொஞ்சம் இருக்கத்தான் வேண்டும்.

எச்சரிக்கை எண் 10: பலகை அடைப்பு வேலைகளின் போது ரச மட்டம் வைத்து மட்டம்
சீராக இருக்கிறதா என்று சோதிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் மாட்டார்கள். தேவையற்ற சரிவுகள் சறுக்கலில் முடியும். பலகைகள் நொறுங்கி விழும். கவனம். கவனம்.

எச்சரிக்கை எண் 11: ரொம்பவும் திறமையாகச் செயல்படுகிறோமாக் கும் என்று நினைத்துக் கொண்டு
மறுநாள் வேலைக்குத் தேவையான செங்கல், மணல், சிமெண்டை எல்லாம் கொண்டு போய்ப் புதிதாகக் கான்கிரீட் இடப்பட்ட தளத்தில் அடுக்கி வைக்கிறீர்களா? அதிகப்படி ஆபத்து.  மெதுவாய்ப் பார்த்துக் கொள்ளலாமே? உங்கள் அவசரம் கான்கிரீட்டிற்குப் புரியுமா?
அதிக கனத்தை ஏற்றினாய், நான் உட்கார்ந்துவிட்டேன் என்று சொல்லி விடும். பார்த்துக் கொள்ளுங்கள்.

எச்சரிக்கை எண் 12: வேலைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானவைதானா? வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துகிறீர்களா? வாடகைக்குக் கொடுப்பவர்கள் அந்தப் பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்களா? தரம் குறைந்த பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடுகிறார்களா? கவனமாக இருங்கள். பத்துக் கால்கள் வேண்டி இருக்கும் இடத்தில் எட்டு போதும் என்று சிக்கனம் பண்ண நினைக்க வேண்டாம்.கட்டிடத்திற்கும் பாதுகாப்பு வேண்டும்.
அதே சமயம் ஆட்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களை தாக்கும் எம்.எஸ்.டி நோய்!



கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது நாம் நன்கு அறிந்ததுதான். ஆனால், அன்றாடம் கூலிக்கு சூரிய ஒளியிலும், இரசாயனங்களின் நெடியிலும், அதிக சத்தத்திலும், சிமெண்ட் கலவை புழுதியிலும், ஈரத்திலும் பணிபுரியும் கட்டு
மான தொழிலாளர்களுக்கு, எண்ணற்ற வியாதிகள் ஏற்படுகிறது என்பது நாம் அரியாத ஒன்று. ஆஸ்துமா, காசநோய், அல்சர் போன்ற தொந்தரவுகள் மட்டுமன்றி தற்போது எம்.எஸ்.டி என்கிற எலும்பு சார்ந்த நோய் கட்டுமானத் தொழிலாளர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர் களை மட்டுமே தாக்கும் நோய் இது என்று சொல்லமுடியாது. ஆனால், ஊட்டச்சத்தில் குறைபாடு உள்ளவர்கள், கடுமையான உழைப்பு மேற்கொண்டும் சரிவர உணவு உண்ணாதவர்கள், ஒரே நிலையில்அமர்ந்தோ,  நின்றோ பணிபுரிபவர்கள், பாரங்களை கையாளுபவர்கள், உயரங்களில் பணிபுரிபவர்கள்,

நோய் எதிர்ப்பு திறன் குறைவானவர்கள், புகை, மது பழக்கம் உடையவர்கள், பிறப்பிலேயே எலும்புகளில் போதுமான பலம் அற்றவர்கள் என பல்வேறு வகையினரையும் இது தாக்குகிறது என்றாலும் மேற்சொன்ன பல்வேறு நிலைகளில் பணிபுரியக் கூடியவர்களாக கட்டுமானத் தொழிலாளர்களே உள்ளனர் என்பது வேதனையான உண்மை.

இந்நோய் பற்றி பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தெரியாது. அவர்களால்அதை முன்கூட்டியே உணர்வதும் கடினம். ஆனால் என்ன மாதிரியான வேலைகளைச் செய்யும்போது இந்த நோயால் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொண்டால் எச்சரிக்ககையாக இருக்கலாம்.

என்ன அது எம்எஸ்டி?

எம்.எஸ்.டி. என்பது மஸ்குலோஸ்கெலிட்டல் டிஸார்டர் (Musculoskeletal disorder) என்பதன் சுருக்கமாகும். பெயரில் இருந்தே ஓரளவுக்கு ஊகித்து விடலாம். தசை மற்றும் எலும்புகளைத் தாக்கும் ஒரு வகை நோய் இது. ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதே கடினம். அப்புறமல்லவா சிகிச்சையை மேற்கொள்வது?

உயரமான இடங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உண்டு. அங்கே இருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறார்கள் என்போம். என்ன ஆகும்? எலும்பு முறியும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இந்த வகை பாதிப்பை உடனே உணர்ந்து கொள்ளலாம். ஆனால், எம்.எஸ்.டி யால் ஏற்படும் விளைவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் கீழே விழுவதால் உண்டாகக் கூடிய அதே அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எப்படி ஏற்படுகிறது?

பொதுவாக, அதிக எடையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான நோய்த் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கட்டுமானத் துறையில் இது பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. சிமென்ட் மூட்டைகள், கம்பிகள்,பாளங்கள், கருவிகள், கற்கள், ஓடுகள் என்று கனத்திற்குக் குறைவே இருப்பதில்லை.

அதிக எடை என்று எதை எடுத்துக் கொள்வது?

25 கிலோவுக்கு மேல் போகுமானால் அது அதிக எடை என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட எடையைத் தூக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டி இருக்கும்போது தண்டுவடம் பாதிப்பிற்கு உள்ளாகும். சுமார் ஒரு வருட காலத்திற்குள் இதன் விளைவுகள் மோசமாகத் தலை காட்டத் தொடங்கும். ஆளையே முடக்கிவிடும்.

மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிற தொழிலாளர்கள் அதிகம். இந்தியாவிலோ
மற்ற ஆசிய, வளரும் நாடுகளிலோ இந்த நோய் பற்றிப் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. அப்படியே தெரிய வந்தாலும் அவர்கள் அதைப் பெரிய விசயமாக எடுத்துக் கொள்வதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் கூலித் தொழிலாளர்கள் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர்கள்.கடினமாக வேலை செய்வதால் உடல் வலி ஏற்படுகிறது என்று இவர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வார்கள். அந்த வலியை மறப்பதற்கு ஏற்ற வழியாக மது பானங்களை நாடுவார்கள். இதனால்அவர்களது உடல் நலம் மேலும் பாதிக்கப்படும்.
இன்னொரு வகையிலும் இவர்கள் இது பற்றி அலட்சியமாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை, படிப்பறிவு இல்லாமை,கடின உழைப்பிற்குப் பழகிப்போன குணம் ஆகியவை காரணமாக இவர்கள் இந்த நோயை கண்டுகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். மேலும், இத்தகைய தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த நோய் தாக்கி இருக்கிறது என்று தெரிந்து மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்கள்?

அவர்களை வேலைக்கு அமர்த்தும் கட்டட உரிமையாளர்களோ கட்டுமான நிறுவனங்களோ எந்த வகையிலும் உதவப் போவதில்லை. பெரும்பாலும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு மருத்துவ உதவி போன்ற வசதிகளும் கிடைப்பது இல்லை. சாதாரணமாய் முதுகு வலிக்கிறது என்று எடுத்துக் கொள்வார்கள்.

சத்துள்ள உணவைச் சாப்பிடாததால் உடல் பலவீனம்அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்கள்.  கைப்பக்குவமாகக் கசாயம் வைத்துக் குடித்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எடுத்துக் கொள்வார்கள். வலியை மறக்க மது அருந்துவது சரியான வழி என்று பின்பற்றுவார்கள். சாதாரண வாயுப் பிடிப்பு என்று ஆரம்பிக்கும் வலி போகப்போக முற்றும். நிரந்தரமாக, கடுமையான வலி தொடரும். வேறு எந்த வேலையையும் செய்யவிடாமல் முடக்கிப் போடும்.

சிலர் இந்தக் கடும் வலியையும் பொறுத்துக் கொண்டு வேலைக்குச் செல்வார்கள். என்ன செய்வது.. நமது தலையெழுத்து அவ்வளவுதான்.. வேறு வழி என்ன இருக்கிறது... எனவே தொடர்ந்து இதே வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணுவார்கள்.

தவிர்ப்பதற்கு வழி உண்டா?

அதிகப்படி சுமையை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறதா? அதிக தூரம் சுமையுடன் நடக்க வேண்டி இருக்கிறதா? திரும்பத் திரும்ப அதே மாதிரி வேலைதானா? வேண்டாம் என்று சொல்ல முடியாது.  கட்டட மேஸ்திரி களும் சூபர்வைசர்களும் விட மாட்டார்கள். வேலையைச் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டுவார்கள். வேகமாகவும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். கூலித் தொழிலாளர்கள் இதில் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது.

முடிந்தவரை அதிகப்படி எடையைக் கையாளவேண்டிய வேலைகளைத் தவிர்க்கலாம். தொடர்ந்து அதே மாதிரியான வேலைகளுக்குப் போவதையும் விட்டு விடலாம். வேறு விதமான, எளிய, சுமை அதிகம் இல்லாத வேலைகளைச் செய்ய முயற்சிக்கலாம்.கொஞ்சம் படிப்பஷூவை வளர்த்துக் கொள்வதும் வேலையை மாற்றிக் கொள்ள உதவும். ஆரம்ப கட்டத்திலேயே நோய் தாக்கி இருப்பதன் அறிகுறி தெரிய வந்தால் உடனே சிகிச்சைக்குத் தயாராக வேண்டும். ஒன்றுமில்லை என்று உதாசீனப்படுத்துவதோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதோ கூடாது.
கட்டுநர்களும் தங்கள் கண்ணுக்கு கண்ணான தொழிலாளர்களின் நலன் குறித்த நடவடிக்கைகளைமேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பார்வைத்திறன், செவித்திறன் போன்ற வற்றை இதுபோன்ற தொழிலாளர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கின்றன. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றையும் பரிசோதிக்கின்றனர். இனி கட்டுமான தொழிலாளர்களின் எலும்புகளின் தன்மை, பலம் ஆகியவற்றையும் அவ்வப்போது பரிசோதிக்க ஆரம்பித்தால். எம்.எஸ்.டி நோய் ஆரம்ப கட்டத்திலேயே தெரிய ஆரம்பித்து விடும்.

எம்.எஸ்.டி நோய் தொடர்பான பிரச்சாரங்கள் சமூக நல நிறுவனங்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது

பட்ஜெட் வீட்டிலிருந்து பங்களா வரை !


பெரும்பாடுபட்டு தனி வீட்டையோ, ஃப்ளாட்டையோ வாங்கிப் போட்டு குடி போகும் நடுத்தர மக்களின் கண் முன்னே நிழலாடுவது வீட்டுக்கடன் மட்டுமே. மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுகிற அவஸ்தையே பெரிதாக இருக்கும்போது தனது புது வீட்டிற்கான இன்டிரியர் பற்றி பெரிதாக கவலை கொள்ள மாட்டார்கள்.

       அதன் பயன் ? வீடு புத்தம் புதிதாக இருந்தாலும் பழைய வீட்டில் இருந்த எல்லா பொருட்களையுமே அடுக்கி வைத்திருப்பர். வீடும் பழைய வீட்டைப் போலவே காட்சியளிக்கும். “புத்தம் புதிய வீட்டிற்கு வந்து என்ன பலன்?. வீட்டில் உள்ள எல்லா பொருட்களையுமே நம்மால் புதிதாக வாங்க முடியாதுதான். ஆனால், கொஞ்சம் இன்டிரியர் அலங்காரத்திற்கு நாம் மெனக்கெட்டால் ஆடம்பரம் இல்லாத, அதே சமயம் அசத்தலான இன்டிரியர் அலங்காரத்தில் நம் வீடு ஜொலிக்கும். இதற்கென பெரும் பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை. கொஞ்சம் முன்னேற்பாடாக திட்ட மிட்டிருந்தால் போதும்” என்கிறார் சென்னை எலைட் இன்டிரியர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. கே. குமரன்.

       திரு. கே.குமரனுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இதில் பிரதிப் குமார் என்னும் சகோதரரும் (ஆர்கிடெக்ட்சர் பயின்றவர். தற்போது எலைட் இன்டிரியர் நிறுவனத்தில் தலைமை வடிவமைப்பு இயக்குநராக இருக்கிறார்) இன்டிரியர் துறையில் பத்து ஆண்டு கால அனுபவமிக்கவர்கள். மின்னியல் கட்டிடவியலிலும் ஏராளமான பணிகளை செய்து முடித்தவர்கள். சென்னை கட்டுமானத்துறையில் இன்டிரியர் அலங்காரத்திற்கு என ஏராளமான தேவைகள் இருக்கவே தற்போது இன்டிரியரில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்கள். நாங்கள் நேர்காணலுக்காக சென்றபோது, ஒரு மிகப்பெரிய புராஜெக்டை சிறப்பாக முடித்த உற்சாகத்தோடு இருந்தார்கள். பட்ஜெட் வீடுகளுக்கான அலங்காரத்தை பற்றிக் கேட்டதும் மிகவும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார் திரு. கே.குமரன். “நடுத்தர மக்கள் வீட்டை வாங்கும்போது கூடுதலாக சில ஆயிரங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்

     . வீட்டின் விலை என ஒன்று இருந்தாலும் இ.பி டெபாசிட், வாட்டர் கனெக்ஷன், ரிஜிஸ்ட்ரேஷன், டாகுமெண்ட் சார்ஜ் என கூடுதல் கட்டணங்களை முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கேற்றாற் போல் தொகையை தயார் செய்கிறார்கள் அல்லவா? அதுபோன்று தான் இன்டிரியருக்கென தங்களால் இயன்ற ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளலாமே? வீட்டின் விலை 30 லட்சம் என்றால், எண்பதாயிரம் ரூபாயை நம்மால் இன்டிரியருக்காக செலவு செய்ய முடியும் தானே? இன்டிரியர் என்பது நமது இல்லத்தை அழகாக்கும். நமது ரசனையை பறைசாற்றும் என்பதெல்லாம் கூட அடுத்ததுதான். மிக முக்கிய மாக ஒரு வீட்டின் இன்டிரியர் என்பது அந்த வீட்டின் கட்டிடச் சுவர்களை, தரைகளை, கூரைகளை பாதுகாக்கும் என்பது அனைத்து தரப்பு மக்களும் அறியக் கூடிய செய்தியாகும்.வீடு என்பது ஒரு கட்டிடம்தான். அதாவது பொம்மை மாதிரி. பொம்மைக்கு ஆடை அணிவித்து அழகு சேர்ப்பதுதான் நம்முடைய வீடுகளுக்கான இன்டிரியர் இன்னும் சொல்லப்போனால் இன்டிரியர் என்பது ஏறக்குறைய ஒரு மனிதனுடைய உடல் அமைப்பு மாதிரிதான். மேல் தோற்றம் எப்படி இருந்தாலும், உடலின் உள்ளே இருக்கும் பாகங்கள்தான் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.

    அதே மாதிரி வீடு எப்படி இருந்தாலும் அதிகம் நாம் வாழப்போவது வீட்டின் உள்ளேதான். ஆகவே, வீட்டைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இன்டிரியர்தான். வாடிக்கையாளர்கள் இன்டிரியர் பணிகளுக்கு ரூ.50,000 செலவிடுவார்கள், ரூ.1 லட்சம் செலவிடுவார்கள், ஏன்? ரூ.10 லட்சம் கூட செலவிடுவார்கள். நாங்கள் ரூ.50 லட்சத்திற்கான இன்டிரியர் பணிகளைக் கூட செய்திருக்கிறோம். ஆகவே, அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ற விதத்தில் நாங்கள் உள்ளலரங்காரங்களைச் செய்து தருகிறோம்.” என்றார் திரு. கே.குமரன். இன்டிரியர் முக்கியத்துவத்தை திரு. கே.குமரன் அவர்கள் சொல்ல எலைட் நிறுவனத்தைப் பற்றியும் அதன் பணிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு இயக்குநரான திரு கே.பிரதிப் குமார். “சந்தையில் பல இன்டிரியர் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், எலைட் இன்டிரியர் நிறுவனம் இன்டிரியர் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தனக்கென சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனமாகும். படுக்கையறை, கிச்சன் மற்றும் வார்ட்ரோப் அலங்கரிப்பதற்குத் தேவையான பொருட்களை தயாரிப்பதற்காக நாங்கள் தனியாக தொழிற்சாலை வைத்திருக்கிறோம். குறைவான விலையில், நல்ல தரமான பொருட்களைக் கொண்டு இன்டிரியருக்கான பணிகளை முடிக்கிறோம். குறைந்த விலை, விநியோக செலவு மற்றும் தரமானதயாரிப்பு இவைதான் எங்கள் வெற்றிக்கான சூத்திரம். .

         ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் வீட்டிற்குள் நுழையும்போது எங்களை நினைத்துக் கொள்ளும் வகையில் இன்டிரியர் பணிகளை செய்து முடிக்கிறோம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டைக் கட்டும்போது ஏற்பட்ட குறைகளையும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப நாங்கள் செய்யும் இன்டிரியர் பணிகளால் நிவர்த்தி செய்கிறோம். சிறிய கட்டுமானங்களுக்கு நாங்கள் செலுத்தும் அக்கறையோடுதான் பெரிய கட்டுமானங்களுக்கும் எங்கள் இன்டிரியர் பணிகளைச் செய்து தருகிறோம். அதற்கான நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய பொருட்களை உபயோகிக்கிறோம். பெரிய கட்டுநர்களுக்கென்று தனி பட்ஜெட் இருக்கிறது. அந்த பட்ஜெட்டிற்கு ஏற்ப நாங்கள் செய்து தருகிறோம். மேலும், அந்தக் கட்டுமானங்களில் ஒரே புராடெக்டுகளைப் பயன்படுத்தி இன்டிரியரை செய்யச் சொல்வார்கள். அதன்படியே நாங்களும் செய்வோம்.அதிகமான பட்ஜெட்டில் இன்டிரியர் செய்ய வேண்டியிருந்தால் இத்தாலியன் பி.யு. வண்ண ஷட்டர், ரப்பர்வுட் ஷட்டர் போன்ற உயர்தர பொருட்களை இறக்குமதி செய்து உபயோகிக்கிறோம்.

        ஏனெனில் சென்னையில் உயர்தர வடிவமைப்பிற்கான சாதனங்கள் கிடைப்பதில்லை. ” உங்கள் நிறுவனத்தின் இன்டிரியர் பணிகள் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் மேல்தட்டு மக்கள், இவர்களைப் பொறுத்து எப்படி வித்தியாசப்படுகிறது? “எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை எல்லாவகையான தரப்பினருக்கும் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் உள்ளலங்காரத்தை சிறப்பாக செய்து தருகிறோம். சிலர் அதிகமான பட்ஜெட்டில் வீட்டை கட்டி முடித்திருப்பார்கள். ஆனால் இன்டிரியருக்கென சிறிய தொகையையே ஒதுக்குவார்கள். குறைவான பட்ஜெட்டில் வீடு கட்டுபவர்களில் சிலர் பெரிய தொகையை செலவிடுவார்கள். எனவே, இன்டிரியர் பணி என்பது அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் தான் அமையும். வாடிக்கையாளர்களின் பட்ஜெட் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுவது. சில ஆயிரங்களில் இன்டிரியர் செய்துகொடுங்கள் என்று சொல்பவரும் உண்டு. இன்டிரியருக்காக லட்சக்கணக்கில் செலவழிப்பவரும் உண்டு. இரு தரப்பினருக்கும் உரிய பட்ஜெட்டில் நாங்கள் இன்டிரியர் பணிகளை மேற்கொள்கிறோம். சுருக்கமாக சொன்னால் பட்ஜெட் வீடுகளுக்கும், பங்களா வீடுகளுக்கும் இன்டிரியர் மிகவும் ஏற்றது”.எலைட் நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை கூறுங்கள் ? “எங்கள் நிறுவனத்தைப் பற்றி சிறப்பாக சொல்வதென்றால் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடும், ஒருமித்த உணர்வோடும் பணிகளைச் செய்வதுதான். வீட்டைக் கட்டி முடிக்கும் தருவாயில் வாடிக்கையாளர்களுக்கு எங்களுக்கென இருக்கும் ஆர்க்கிடெக்டுகளைக் கொண்டு நாங்களே டிசைன்களை வடிவமைத்துத் தருகிறோம். எப்படி செய்தால் அவர்களின் வீட்டின் உள்ளலங்காரம் நன்றாக அமையும்? எங்கே சுவர் அமைக்கலாம்? எங்கெல்லாம் எலெக்ட்ரிகல் பாயிண்டுகள் வைக்கலாம்? எந்த இடத்தில், எந்த வண்ணங்களில் பெயிண்ட் அடிக்கலாம்? என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் அவர்களுக்கு எந்த செலவுமின்றி முன்னரே தெரிவித்து விடுவோம்.

       எங்களுக்குத் தெரிந்த நவீன தொழிற்நுட்பங்களைக் கையாண்டு இன்டிரியர் பணிகளை செய்து முடிப்போம். எங்கள் நிறுவனத்தில் சேல்ஸ் டீம், டிசைனர் டீம், புரடக்ஷன் டீம் மற்றும் கோர்ஸ் டீம் என்ற நான்கு வகை குழுக்கள் இருக்கின்றன. பயிற்சி அளித்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வாகும். எங்கெல்லாம் கட்டுமானம், இன்டிரியர் பற்றி கண்காட்சிகள் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் முதலில் நாங்கள் சென்று பார்த்து விட்டு பின்பு இங்குள்ள பணியாளர்களுக்கு புதிய தொழிற்நுட்பங்களைப் பற்றிக் கூறி ‘இங்கேயும் நிச்சயம் நம்மால் செய்ய முடியும்’ என்று அவர்களுடைய மனதில் நம்பிக்கையை வளர்த்து அதன்படி பணிபுரியச் செய்வோம்” என்றார்
பிரதிப்குமார் .

எலைட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி பொதுமேலாளர் திரு ஏ.சி.ஜெயதேவ் அவர்கள் விளக்கிய போது,
“இன்டிரியர் அலங்காரம் தவிர தரமான மாடுலர் கிச்சன்கள், வார்ட்ரோப்கள் மற்றும் பரண்கள் ஆகியவற்றை லேமினேஷன், ரப்பர் வுட் மெம்பரின், பாலியூரிதின் போன்ற மூலப் பொருட்களினால் தயாரித்து குறைந்த விலையில் தருகிறோம். இவை அனைத்துமே எங்களது இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு இயந்திரங்கள் வைத்து தயாரித்தளிக்கிறோம்.

என்பது குறிப்பிடத்தக்கது. கதவுகளைப் பொறுத்தவரை எங்களிடம் 150க்கும் மேலான மாடல்களில், நிறங்களில் கண்ணைக் கவரும் கதவுகள் வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன. எங்களது மாடுலர் கிச்சன்கள் மற்றும் வார்ட்ரோப்களுக்கு 5 வருட உத்ரவாதத்தினை அளிக்கிறோம். வீடுகள் மட்டுமன்றி அலுவலகம் போன்ற பிற தேவைகளுக்கான இன்டிரியரும் எலைட் நிறுவனம் செய்து தருகிறது.

எங்களை தொலைபேசியில் அழைத்தால், எங்கள் நிறுவன அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்கள் வீட்டிற்கான இன்டிரியர் ஆலோசனை வழங்குவதுடன் இன்டிரியர் மாடல்கள், பிளானிங் மற்றும் எஸ்டிமேஷன் போன்றவற்றை விளக்கி விடுவார்கள்” என்றார். சென்னை மற்றும் புறநகர்களில்தான் இன்டிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் எலைட் நிறுவனம் விரைவிலேயே கோயம்புத்தூர், பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் நகரங்களிலும் தனது சேவையை தொடங்க இருக்கிறது.

           பொதுமக்களுக்கு மட்டுமன்றி இன்டிரியருடன் வீடுகளை விற்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் எலைட் இன்டிரியரின் சேவை பொருத்தமானதாகவே இருக்கும்.

ஆர்.எம்.சி .தரமான கான்கிரீட்டா ?


முன் காலத்தில் வீடு கட்ட தேவையான கலவை, கான்கிரீட் போன்ற பொருட்களை பணியிடத்திலேயே சேகரித்து தயாரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் உண்டாகும் தூசியினால் உருவாகும் சுற்றுப்புற சூழ்நிலை மாசு அதிகமாக இருந்தது. வீடு கட்ட காலதாமதம் ஏற்பட்டதினால் பொருட்களின் தரமும் ஒரே விதமாக இருந்ததில்லை.

        சில நேரங்களில் தரம் வெகுவாக மாறுபட்டது. மேலும், இப்பொருட்களை சேகரிக்கும் நேரம், அலைச்சல் அதிகமாக இருந்தது. தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் தேவைப்பட்டது. இவ்வாறான சிரமங்களை நீக்க ரெடிமிக்ஸ் மார்டர், ரெடிமிக்ஸ் கான்கிரீட் என்கிற கருத்து கட்டுமான வேலைகளில் அதிகமாக பரவிவிட்டது. ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி சமீபத்திய சாதனங்களை தன்னுள்ளே அடக்கியிருக்க வேண்டும்.

அவையாவன: கான்கிரீட் பாட்சிங் பிளாண்ட், ட்ரான்சிட் மிக்சர், கான்கிரீட் பம்ப் முதலானவைகள். மேலும், கான்கிரீட்டை தயாரிப்பதற்கான மென்பொருட்கள் மற்றும் கன்ட்ரோலர்கள் ஆகியவைகளும் அடங்கும். ஆர்எம்சி கான்கிரீட் என்பது கனமீட்டர் என்கிற கொள்ளளவு கணக்கில்தான் வழங்கப்படுகின்றன. ஆர்எம்சி யை ஆர்எம்எக்ஸ் எனவும் குறிப்பிடுவர். வளர்ந்த நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் மிக அதிகமாக உள்ளது. ஆகவே, அங்கு எதையும் இயந்திரமயமாக்குதல் என்கிற கருத்து நிலவுகிறது. இதன் அடிப்படையில்தான் ஆர்எம்சி என்கிற ஓர் ஏற்பாடு உருவாயிற்று. கான்கிரீட் தயாரிப்பும் இயந்திர மயமாக்கப்பட்டது.

தற்போது நமது நாட்டில் இந்த நடைமுறை வெகுவாக பரவி விட்டதால், இதன் தரக்கட்டுபாட்டை கண்காணிக்க ரெடிமிக்ஸ் கான்கிரீட் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷன் (RMCMA) என்கிற அமைப்பு மும்பையில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வமைப்பு இரு தரக்கட்டுப்பாடு கோட்பாடு நூலினை தொழிற்துறையும், மக்களும் பயன்பெறும் பொருட்டு வெளியிட்டுள்ளது. ஆர்எம்சி வியாபாரம் இந்தியாவில் தவழும் நிலையில்தான் உள்ளது. உதாரணத்திற்கு, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் சிமெண்டில் 70 விழுக்காடுகள் ஆர்எம்சி வியாபாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாறாக இந்தியாவில் 2 விழுக்காடுகள் சிமெண்ட்தான் ஆர்எம்சி வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆர்எம்சி யின் நன்மைகள்

1. ஒரே சீரான, ஒரே பதமுள்ள மற்றும் உறுதி செய்யப்பட்ட நல்ல தரமான கான்கிரீட் கிடைக்கிறது.
2. கான்கிரீட் கலவை வடிவமைப்பில் ஓர் தளர்வு அல்லது சுதந்திர போக்கு கிடைக்கிறது.
3. மாற்று பொருட்களின் உடன் சேர்க்கைக்கான வசதி உள்ளது.
4. அதிக விரைவான மற்றும் துரிதமான கட்டுமானம் உருவாக வாய்ப்புள்ளது. 5. பணியிடத்தில் அடிப்படை பொருட்களை சேகரித்து வைப்பதில் உள்ள இடப்பற்றாக்குறைக்கு விடுதலை.
6. பணியிடத்தில் தேவையான இயந்திரங்களை வாங்கி நிறுத்தி வைப்பது அல்லது வாடகைக்கு எடுப்பது என்கிற நடைமுறை நீக்கப்படுகிறது.
7. அடிப்படை பொருட்கள் வீணாவது தடுக்கப்படுகிறது.
8. கான்கிரீட் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படும் அதிக எண்ணிக்கை தொழிலாளர்கள் நீக்கப்படுகின்றனர்.
9. பணியிடத்தில் கான்கிரீட் தயாரிப்பதற்கு அதிக நேரம் ஆகிறது. இது மிச்சப்படுகிறது.
10. ஒலி மற்றும் தூசி முதலான மாசு குறைகிறது.
11. பணியிடத்தில் வேலைகள் ஓர் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
12. கான்கிரீட்டின் கலவை மற்றும் அதன் பொருட்களின் அளவு துல்லியமாக இருக்கிறது.
13. சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணீர் ஆகிய பொருட்களின் தரம் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகிறது.
14. கலக்கும் தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஏனெனில், இதில் மனித தவறு இல்லை.
15. தரக்கட்டுபாடு மிக துல்லியமாக ஒரே இடத்தில் நடைபெறுகிறது.
16. மூலப் பொருட்களை மோசமான முறையில் சேகரித்து வைத்தல்
17. சூழ்நிலையின் பாதிப்பினால் அவற்றின் தரம் குறைவது தடுக்கப்படுகிறது.
18. அதிகமான உயரத்திற்கு கான்கிரீட் பம்ப் செய்ய ஏதுவாக இருக்கிறது. இல்லையென்றால் தரையிலிருந்து அந்த உயரத்திற்கு சாரம் கட்டி ஏற்பாடு செய்ய வேண்டும்.
19. கான்கிரீட் தானாகவே மட்டப்படுத்தப்படுவதால் சமமான தரை ஏற்படுவதில் சுலபம்.
20. பணியிடத்தில் இருக்கும் வேலைகளின் நேரத்தில் மிச்சமும், குறைவும் உண்டாகிறது.
21. மோசமான தொழில் முறைகளால் உண்டாகும் கலக்கல், மோசமான பணியிடம் மற்றும் சேமிப்பிடம் ஆகிய காரணங்களால் உண்டாகும்

மூலப்பொருட்கள் வீணாவதை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆர்எம்சி யினால் தீமைகள் ஆர்எம்சி கான்கிரீட்டினால் வாடிக்கையாளருக்கு சில தீமைகளும் உள்ளன :

1. மூலப்பொருட்கள் தொலைவிலுள்ள ஃபாக்டரியில் அளந்து எடுக்கப்பட்டு, அங்கேயே கலக்கப்பட்டு பின்பு ட்ரான்சிட் மிக்ஸர் மூலம் கொண்டு செல்லப்படுவதால் பிரயாண நேரம் இதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதிக தொலைவுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் கான்கிரீட்டின் தன்மை மாறுபட வாய்ப்புள்ளது.
2. இதனால் ஏற்படும் கூடுதலான போக்குவரத்து நெரிசல். மேலும், பணியிடத்திற்கு செல்லும் பாதையும், அதற்கு நடத்தி செல்லும் வழித்தடமும் ஆர்எம்சி யின் ட்ராக்டரின் அதிக பளுவை தாங்கும் சக்தி படைத்தவையாக இருக்க வேண்டும். இதில் ஒரு கன மீட்டர் சுமார் 2.5 டன் எடை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும், குறுகலான சந்து பொந்துகளில் செல்வதற்கு மினிமிக்ஸ் என்கிற 4 கன மீட்டர் ட்ராக்டரை பயன்படுத்தி இந்த பிரச்சனையை ஓரளவிற்கு தீர்க்கலாம்.
3. கான்கிரீட் கலக்கல் மற்றும் ட்ரக்கில் வெளியே கொண்டு செல்லும் காரணிகளை கான்கிரீட்டின் மிக குறுகிய கால நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது அதை சைட்டுக்கு கொண்டு சென்று 90 மணித்துளிகளில் இட்டு விட வேண்டும். இல்லை யென்றால் அந்த கான்கிரீட் வீணாகிறது. ஆனால், தற்போது கான்கிரீட்டின் செட்டிங் நேரத்தை அதிகரிக்க கெமிக்கல்கள் பயன்படுகின்றன. ஆனால் கெமிக்கல்களை பக்குவமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை ரிடார்டர் என அழைப்பர். இதை அதிக அளவில் கலப்பதால் கான்கிரீட் செட்டாகாமல் ஈரப்பசையோடுதான் இருக்கும்.
4. தற்போது பரவலான கருத்து என்னவென்றால் ஆர்எம்சி கான்கிரீட் ஆரம்பத்திலேயே விரிசல்கள் அடைகின்றன என்பதுதான்.
5. பெரிய அளவில் கான்கிரீட் வேலை நடைபெறும்போது தொடர்ந்து சப்ளை நீடிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து காரணமாக தாமதம் ஏற்பட்டால், போட்ட அனைத்து கான்கிரீட்டும் வீண்தான்.
6.ஒரே ஆர்எம்சி கம்பெனியை நம்பி இருப்பதால் நேரத்திற்கு சப்ளை செய்யாவிடில் காலதாமதம் ஏற்படுகிறது. உடனடியாக மாற்று ஏற்பாடு செய்வதும் சில நேரங்களில் முடியாமல் போய்விடுகிறது.
7. ஆர்எம்சி கான்கிரீட் பயன்படுத்துவதால் சென்ட்ரிங்கை நல்ல முறையில் சந்துகள் இல்லாமல் ஒழுகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை யென்றால் சிமெண்ட் பால் வீணாக வெளியேறி விடும். ஆகவே, நன்மையும் தீமையும் கலந்துள்ள ஆர்எம்சி கான்கிரீட் நாம் செலவிடும் பணத்திற்கு நீண்ட நாட்கள் கணக்கில் நல்ல பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

          இது கட்டுமானத்தை அதிவிரைவாக கட்டுவதற்கு உதவி புரிகிறது.