நாங்குநேரியில் நான் அறிந்த வேட்பாளர்

நாங்குநேரியில் நான் அறிந்த வேட்பாளர்

2009 ஆண்டு ஜனவரி மாதம் ரூபி. பில்டர்ஸ் உரிமையாளர் திரு. ரூபி. ஆர். மனோகரன் அவர்களை பில்டர்ஸ் லைன் மாத இதழின் நேர்காணலுக்காக முதன்முறையாக சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு ( நட்பு என்பது பெரிய வார்த்தை) இன்று அவர் நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸின் சட்டமன்ற வேட்பாளர் அந்தஸ்து பெற்றிருக்கும் வரை தொடர்கிறது.
அவர் 'பிரதர்' என்று தான் அழைப்பார். யாரையும் அவர் அப்படித்தான் அழைப்பார்.
பெரிய மனிதர்களை சமூக சேவையாளர், ஏழைப் பங்காளர் என்றெல்லாம் சிலர் அழைப்பார்கள். சம்பிரதாயமான வார்த்தை அது. ஆனால் ரூபி. மனோகரன் உண்மையிலேயே மாபெரும் சமூக சேவகர் தான். அதற்கென தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி வைத்து விடுவார்.
2015 இயற்கை பேரிடர் பெருவெள்ளத்தில் இவர் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் ஆற்றிய பங்கு அளவிடமுடியாதது. ஆயினும் அவரால் சுதந்திரமாக பொதுப்பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டார். அதன் பின்தான் அவர் தீவிர அரசியலுக்குள் நுழைந்தார் ( அதற்கு முன்பு அவர் 20 ஆண்டுகளாக காங்கிரஸில் பொது உறுப்பினர்தான்..)
ஆண்டுக்கு 100 கோடி வரை கட்டுமானத் தொழிலில் வர்த்தகம் செய்து கொண்டு வெற்றிகரமான கட்டுனராக வலம் வருகிறீர்கள். அதை விடுத்து, அரசியலுக்குள் நுழைந்து விட்டீர்களே? என்றால்,' இங்கே அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை, நல்லவனாக நாலு பேருக்கு உதவ வேண்டும் என்றால் கூட, அரசியல் நிழல் படாமல் இங்கே எதுவும் செய்ய முடியாது' என வேதனையுடன் தெரிவித்தவர் இவர்.
அரசியல் சரி .ஆனால், காங்கிரஸ் ஏன்? எனக் கேட்டால், காமராஜர் தான் காரணம், அவர் இன்றேல் அவர் தந்த சீருடை, கல்வி எனக்கு கிடைத்திரா விட்டால் நான் ஏது? இது காமராஜிக்கு செய்யும் கைம்மாறு..அவ்வளவு தான்' என்கிறார்.
ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பேராவது அவரது சேலையூர் அலுவலகத்தில் கல்வி நிதி, திருமண உதவி கேட்டு வந்து விடுவார்கள். 'இவ்வளவு செலவு செய்கிறீர்களே?' எனக் கேட்டால், 'நாம கொடுத்தால் தான் நமக்கு கிடைக்கும் என்பார்.. இறைக்கும் கேணியில் தானே தண்ணீர் ஊறும்; என்பார்..
நாங்குனேரியில் களம் இறங்கும் அவர், ஒருவேளை ஜெயித்தால், 'ஆளும் கட்சியை மீறீ நலத் திட்டங்களை அந்த தொகுதி மக்களுக்கு செய்து விட முடியுமா?' எனக் கேட்டால், 'முடிந்தவரை நிதி கிடைக்க போராடுவேன். கிடைக்காது போனால், என் சொந்தப்பணத்தைக் கொண்டு நலத்திட்டங்களை செய்து விடுவேன். அது எத்தனை கோடியானாலும் சரி' என கூலாகச் சொல்லி நம்மை திகைக்க வைக்கிறார்.
'நான் எம்.எல்.ஏ வானால் எனக்குக் கிடைக்கும் சம்பளப் பணத்தை இல்லத்திற்கு ஒருபோதும் கொண்டு செல்ல மாட்டேன். ஏழைக்குழந்தைகளின் படிப்புக்காகத்தான் அதை செலவிடுவேன்' என்கிறார்.
நான் வெற்றிபெற்றால், நான் சம்பளமாகப் பெறும் பணத்தை, நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு கொடுத்துவிடுவேன்.
என்னைப் போலவே மற்ற சட்ட மன்ற உறுப்பினர்களும் தங்கள் சம்பளப்பணத்தை தங்கள் தொகுதி வாழ் ஏழை மாணவர், மாணவிகளுக்கு அவர்தம் கல்விச்செலவுக்கு வழங்க ஆரம்பித்தால் அது ஒரு இனிய உதயமாக இருக்கும். அதுதான் உண்மையில் காமராஜரின் ஆட்சிக்கு அடிகோலும் வழியாக இருக்கும்.'' என சொல்லும் அவர்,
நான் எம்.எல்.ஏ ஆனால் சட்டசபையில் உட்கார்ந்து என்நேரமும் மேசையை தட்டிக் கொண்டிருக்க மாட்டேன். எனது பெரும்பணி இங்கே
( நாங்குனேரியில்) தான் இருக்கும்.
ஏனென்றால் நான் இந்த ஒரு தேர்தலில் மட்டும் வெற்றி பெற்று 'முன்னாள் எம்.எல்.ஏ' என்னும் பெயரைப் போட்டுக் கொள்வதற்காக போட்டியிடவில்லை. என்றென்றும் இந்த நாங்கு நேரி தொகுதியில் நிரந்தர எம் எல் ஏவாக வீற்றிருப்பதற்கும்., நாங்குனேரி மக்களில் ஒருவராகவும் வாழ்வதற்கு, சேவை புரிவதற்கு ஆசைப்படுகிறேன்.
அரசியலில் சேவை செய்ய என வந்து விட்டு பின் அரசியலை மையமாக வைத்து தங்கள் தனிப்பட்ட பொருளாதாரத்தை மேம்படைய வைத்துக் கொள்ளும் எத்தனையோ பேரை இந்த தமிழ் நாட்டுமக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பட்டியலில் இந்த நாங்குனேரி வாக்காள பெருமக்கள் என்னை வைக்க மாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஏனென்றால் இளமையிலே வறுமையைச் சந்தித்து, பல இன்னல்களுற்று கடின உழைப்பின் மூலமாக, நேர்மையான வழியில் சட்ட திட்டங்களுக்குட்பட்டு தொழிலதிபராகி அந்த வருமானத்தையும் மக்களுக்காக சேவையும், நலத்திட்டங்களும் புரிந்து வருபவன் நான். எனது சேவையின் அளவை பெரிது படுத்தத் தான் நான் சட்டமன்ற இடைத் தேர்தலில் களமிறங்க்குகிறேனே தவிர, எனது பொருளாதரத்தின் அளவை பெரிதாக இங்கு நான் போட்டியிடவில்லை என்பதை நாங்குனேரி மக்கள் நன்கறிவார்கள்.'' என்று என்னிடம் போனில் உரையாடினார்.
ரூபி மனோகரன் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். 'தவிர்க்க வேண்டிய சக்தி பி.ஜேபி'. என்னும் அவரது நூல் பல எதிர்கட்சிகளின் பேச்சாளர்களுக்கு பெரிய குறிப்புதவி புத்தகமாகும். இது தவிர அவர்' இப்படியும் ஒரு தலைவர்- காமரஜர் 'என்னும் நூலையும் எழுதி உள்ளார். 'நீங்களும் பில்டர் ஆகலாம்' என்னும் அவரது துறைச் சார்ந்த நூல் கட்டுமான பொறியாளர்கள், கட்டுனர்களுக்கு கிட்டத்தட்ட வேதமாகவே மாறி விட்டது. ( இதை கட்டுமானத் துறையினர் அறிவார்கள்)
குமரி மாவட்டத்தில் பிறந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி தன் 34 வயதில் சென்னைக்கு திரும்பினார். தனது தாய் மாமாவுடன் சேர்ந்து சிலசில கட்டட வேலைகளை செய்து வந்தார். பின் தானாகவே பொறியாளர்களை வைத்து வீடு கட்டி விற்க ஆரம்பித்தார். 1996 தொடங்கிய இந்த பயணம் இப்போது 4500 வீடுகளைத் தாண்டி
போய் கொண்டிருக்கிறது. நான்கைந்து நிறுவனங்கள், 200 ஊழியர்கள் 1500 தொழிலாளர்கள் என ஆலவிருட்சமாய் அவரது நிறுவனம் இப்போது வளர்ந்து நிற்கிறது. என்றாலும் 2009- ல் நான் பார்த்த அதே அடக்கத்தோடு, பணிவோடு தான் எல்லோரையும் வரவேற்கிறார்.அணுகுகிறார்.

வறுமையின் உச்சத்தில் அவர் நெடு நாட்கள் இருந்தமையால், இப்போது பெரும் தொழிலதிபரான பின்னும் அதே எளிமையோடு நிற்கிறார்.

ரூபி மனோகரன் ஜெயித்து விடுவாரா? திமுக கூட்டணி அவருக்கு ஆதரவாக இருக்குமா? அவர் நாங்குனேரியை சேர்ந்தவர் இல்லையே? அவர் வசந்த குமாருக்கு உறவினர் தானே? அவருக்கு ஆதரவாகத்தான் இந்த பதிவா?
என்றெல்லாம் கேட்டால் என்னிடம் பதிலில்லை.
ரூபி மனோகரன் நான் அறிந்த வரை மிக நல்ல மனிதர், பாசாங்கு இல்லாதவர். பணத்தைப் பொருட்படுத்தாதவர். சட்டத்திற்கும் விதிகளுக்கும் உட்பட்டு நேர்மையாக தொழில் செய்பவர்.நாங்குனேரி மக்களுக்கு மிகச்சிறந்த தன்னலமற்ற சேவையைத் தரக் கூடியவர்
அவரது நல்ல நோக்கங்கள் நிறைவேறட்டும்.

பா. சுப்ரமண்யம்
ஆசிரியர், பில்டர்ஸ் லைன் மாத இதழ்
பேசி: 88259 91977

#ரூபிமனோகரன்#நாங்குநேரி#இடைத்தேர்தல்#காங்கிரஸ்

பொறியாளர் தின மாபெரும் கட்டுரைப் போட்டியின் முடிவுகள்


மகா சிமெண்ட் மற்றும் பில்டர்ஸ்லைன் கட்டுமான மாத இதழ் இணைந்து நடத்திய பொறியாளர் தின மாபெரும் கட்டுரைப் போட்டியின் முடிவுகள்
(12+35= 47 சிறப்பு பரிசுகள்.... 150 பேருக்கு ஆறுதல் பரிசுகள்)
முழு முடிவுகளை தெரிந்து கொள்ள Click செய்யவும்

The Enginner's Hub






THE ENGINEERS’ HUB
(No.60, Anjugam Nagar, 3rd Street,
Ashok Nagar, Chennai – 600083)

Inauguration of
Training Programme
BUILDING THE BRIDGES
(for Civil Engineers and Civil Engineering Students
from 27th May 2019 to 07th June 2019)

Venue: TAG Auditorium, College of Engg, Guindy, Anna University
Date: 27th May 2019

jointly organized by

Building Technology
Centre
College of Engineering
Guindy
1200px-Anna_University_Logo
CEG  logo  2

in association with

http://www.tnhighwaysengineers.com/images/LOGO1.png
Image result for srm ramapuram logo
VEC logo
Association of Tamil Nadu Highway Engineers
SRM Institute of Science and Technology
(RAMAPURAM)
Velammal   Engineering
College, Chennai

THE ENGINEERS' HUB

cordially invites you for the inauguration of training programme for Civil Engineers & Civil Engineering Students
on
BRIDGE ENGINEERING
at
TAG Auditorium, College of Engg, Guindy, Anna University

Monday, 27th May 2019 at 11.00am

Dr. M. S. Srinivasan
formerly Chief Engineer, TN Highways Department

has kindly consented to be the Chief Guest.


Dr. A. R. Santhakumar
Professor Emeritus – IIT Madras &
 formerly Dean, College of Engineering, Guindy, Anna University

will be the Guest of Honour.

Er. P. Hari Raj
formerly Director General, TN Highways Dept

will be the Special Guest




              The following eminent personalities will grace the function as

Special Invitees

Er.B.K. Thanupillai, CE (Retd), Tamil Nadu Highways Dept.
Er.G.Sivakumar, Former Director – HRS, TN Highways Dept.
Er.M.Kumar, CE (Retd), TN Police Housing Corporation.
Dr.D.Thirunakkarasu, Former Deputy Director, HRS.
Dr.R.Senthil, HoD, Civil Engg, college of Engg , Guindy, Anna University          
                       & Director, Building Technology Centre, Anna University.
Er.K.Anbu, SE (PWD) & General Secretary, TNPWD.
Er.C.Kalyanasundaram, SE, TN Public Works Department.
Er.P.Dhandapani, SE, TN Generation & Distribution Co.
Er.A.Venkatachalam, DE (Highways) & President, ATNHE.
Er.K.P.Sathiyamoorthi, Dy CE, TN Public Works Department.
Dr.K.Balasubramanian, MD, Hitech Concrete Solutions.
Er.R.Ramdoss, Chairman, IEI, Tamil Nadu State Centre.
Dr.T.Ch.Madhavi, HoD, Civil Engg, Velammal Engg College, Chennai.
Dr.R.Ganesan, HoD, Civil Engg, Velammai Engg College, Chennai.
Er.R.Sathianathan, Chairman, Ramya Sathyanathan Polytechnic.
Er.D.Gokul, Scientist, ISRO & Coordinator, EWB – India.    
Er.B.Dhanaseelan
General Secretary
The Engineers' Hub


**Training is of Two Weeks duration (27.05.2019 – 07.06.2019)
    No fees need to be paid for the Training.


The  ENGINEERS’ HUB
WhatsApp Image 2019-05-03 at 1

ETHICAL ENRICHING ENGINEERS


Founded in January 26, 2009, The Engineers’ HUB – the Civil Engineering Bigwigs with Unabated Humanity  - is a professional civil engineering association, registered as a  charitable trust,  which provides a platform for the  exchange of ideas and experiences, where  the senior professionals can share their knowledge and guide the Young Students and Professionals of Civil Engineering for a fruitful and fulfilling career.

Salient Programmes Conducted by The HUB so far

             2009 – 1 day seminar on Sustainability
             2010 – 2 weeks free training for TNPSC AE Exam 
             2010 - Co-organized 1 day Seminar at IIT-M with IE (I) – TN Centre
             2012 - 1 week On-site Training for Civil Engg Students
             Annual Inter-collegiate B E Civil Engineering Quiz Competitions in
         Velammal Engg College, Chennai (2012, 2013, 2014, 2015, 2017)
             2013 - State Level Civil Engg Technical Model Competition along with ATNHE
             2017 - Co-Organiser for the Intl Conf ICSTaGE --Velammal Engg Clg,    
         Chennai
             2017 -- The Engineers’ HUB first Students Chapter established in Velammal Engineering College, Chennai  
             2017 – 1 week Summer On-site Training for BE Civil Engg Students along with ATNHE.
                   2018 -- Programme on Career Development and Placement Assistance to Young Civil Engineers with IE (I)– TN Centre
                   2019 – Technical Talk by L & T Expert on Green Building in association with ACCE (I) – Chennai Centre.

230

hai all

புஷ்கர் நிறுவனத்தின் உலகத் தர வீடுகள்

புஷ்கர் நிறுவனத்தின் உலகத் தர வீடுகள்
--------------------------------------------------------------------
" மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள், அதிகபட்ச பிரைவசி, விஸ்தாரமான வீடு, உலகத்தர கட்டுமானம், ஹை புரொஃபைல் ஆட்டோமேக்ஷன், லக்சரி இன்டீரியர் போன்றவற்றை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், பங்களா போன்ற ப்ளாட் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் புஷ்கரின் புராஜெக்டுகள் மிகவும் ஏற்றவை."

-------------------------------------------------------------------
சென்னை அண்ணா நகர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனம் புஷ்கர் ப்ராபர்டிஸ். அண்ணாநகர், கொளத்தூர், கொரட்டூர் போன்ற மேற்கு சென்னை பகுதிகளிலும், அடையாறு, குரோம்பேட்டை போன்ற தென் சென்னைப் பகுதிகளிலும் மட்டுமின்றி, தி.நகர் போன்ற மத்திய சென்னையிலும் ஏராளமான லக்சரி புராஜெக்டுகளை செய்து வரும் நிறுவனம் இது.

வீடு விற்பனை என்பதே சவாலாகிப்போன இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட 10 லட்சத்திற்கும் 20 லட்சத்திற்கும் வீடுகளை விற்க தயாராக இருக்க, “எனது புராஜெக்டின் ஆரம்ப விலையே95 லட்சம் தான்” என சிரித்தபடியே சொல்கிறார் புஷ்கர் ப்ராபர்டிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு.கீர்த்திவாஸ்.

“2000க்கு பிறகுதான் இந்த நிறுவனத்தைத் துவங்கினேன். நான் படித்ததெல்லாம் ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ மேனேஜ்மென்ட்தான். ஆனால், நான் அனுபவ சிவில் பாடத்தை ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
அதுதான் சென்னை சைதன்யா ஹோம்ஸ். அங்கு எனது தந்தையின் நண்பர் சைதன்யா ஹோம்ஸின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் ரெட்டி அங்கிளிடம்தான் சிவில் பொறியியல், கட்டுமான மேலாண்மை போன்ற அனைத்து விக்ஷயங்களையும் கற்றேன். ஒரு கட்டுமான புராஜெக்டின் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரமேஷ் அங்கிளின் ஆசியோடு சைதன்யா ஹோம்ஸிலிருந்து விலகி புஷ்கர் நிறுவனத்தைத் துவங்கினேன். முதல் இரண்டு புராஜெக்டுகள் லேசாக தடுமாற்றம் இருந்தாலும் அடுத்தடுத்த புராஜெக்டுகளில் வெற்றி பெற ஆரம்பித்தேன்.”

2000 காலகட்டம் என்பது ரெஸிடென் ஷியல் புராஜெக்டுகளின் பொற்காலம் எனச் சொல்லலாம். அப்போது இருந்த பல்வேறு பில்டர்கள் நடுவே உங்களது புராஜெக்டுகளை எப்படிப்பட்ட தனித்தன்மையுடன் உருவாக்கத் திட்டமிட்டீர்கள்?

“நானும் எல்லோரையும் போல நிலம் வாங்கி நடுத்தர மக்களுக்கான வீடுகளை கட்ட நினைத்தேன். ஆனால், அவர்களுக்கான குறைந்த செலவில் அதிகபட்ச வசதிகளுடனான பட்ஜெட் வீடுகளை சென்னையின் முக்கியமான பகுதிகளில் உருவாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தன. மிகக் குறைந்த விலையுடைய வீடுகளில் தரமான கட்டிடப் பொருட்களையும் உதிரிபாகங்களையும் பயன்படுத்த பட்ஜெட் ஒரு தடையாக இருந்தது. அதேசமயம் உலகத் தரத்திலான ஒரு குடியிருப்புக் கட்டுமானத்தை உருவாக்க நான் சைபடுகிறேன் என்றால், அதை நடுத்தர மக்களால் வாங்க முடியவில்லை. எனவேதான் நான் தீர்மானித்தேன். 30, 40 லட்சங்களில் சுமாரான வீடுகளை உருவாக்குவதை விட 90 லட்சம், 1 கோடியில் சகல வசதிகளுடன் கூடிய லக்சரி புராஜெக்டை அதுபோன்ற வீடுகளை விரும்பக் கூடிய உயர்குடி மக்களுக்கு உருவாக்க நினைத்தேன்.

நான் வழக்கமான பில்டர்களிடமிருந்து வேறுபட நினைத்தது இந்த விக்ஷயத்திற்காகத்தான். அதாவது, 2 கிரவுண்ட் நிலம் வாங்கி தீப்பெட்டி போல 16 வீடுகள் கட்டுவது என் ஸ்டைல் அல்ல. 2 கிரவுண்ட் நிலத்தில் நான்கே நான்கு லக்சரி வீடுகளை கட்டுவதுதான் என் ஸ்டைல். நான் மட்டுமல்ல, என்னைப் போன்றே உயர்தர குடியிருப்புகளை இன்னும் சில பில்டர்கள் கட்டி வருகிறார்கள்.”

புஷ்கரின் புராஜெக்ட் என்றாலே அல்ட்ரா டீலக்ஸ் புராஜெக்ட் தான் என உங்கள் தர அளவீட்டை மக்கள் நினைப்பதற்கு அடிப்படைக் காரணமாக என்ன நினைக்கிறீர்கள்?

“என் புராஜெக்டின் தரம் என்பது மண் பரிசோதனையிலிருந்து துவங்குகிறது. தலைசிறந்த மண் பரிசோதனை நிபுணர் டாக்டர். பிரசாத் அவர்கள் தான் எனக்கு சாயில் டெஸ்டிங் எக்ஸ்பெர்ட். இந்தியாவின் நெம்பர் ஒன் ஸ்ட்ரக்சுரல் ஆர்கிடெக்ட் அலெக்ஸ் ஜேக்கப் அவர்கள் தான் எனது எல்லா புராஜெக்டுகளும் டிசைன் செய்கிறார். ஒவ்வொரு கட்டிடப் பொருட்களும் அனைத்து தர பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டே எனது புராஜெக்டுகளில் பயன்படுத்தப் படுகிறது. டைல், மார்பிள்களில் துவங்கி எலெக்ட்ரிக்கல், பைப், கேபிள், கதவு, ஜன்னல் என ஒவ்வொன்றும் டாப் கிளாஸ், டாப் பிராண்டாக தான் புஷ்கர் புராஜெக்டில் பயன்படுத்தப்படும் என்பது எனது வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல பிறரும் நன்கு அறிந்த ஒன்று.

எனது புரௌசர் மற்றும் அக்ரிமென்டில் என்ன பிராண்ட் பொருளை கம்மிட் செய்கிறேனோ அதிலிருந்து ஒருபோதும் நான் தவஷூயது கிடையாது.

எனது எல்லா புராஜெக்டுகளும் ஏசி வசதியுடன் கூடிய ஹோம் ஆட்டோமேக்ஷன் புராஜெக்டுகளாக தற்போது உருவாகி வருகிறது. வீட்டின் அனைத்து கட்டுபாடுகளும் தானியங்கி வசதிகளைக் கொண்டதாக அவை இருக்கும். அதனால்தான் ப்ளாட்டின் சாவி கொடுக்கும் போதே, ஐ பேட் ஒன்றைக் கொடுத்து விடுகிறோம். அதில் வீட்டின் அனைத்து கன்ட்ரோலும் அடங்கி விடும். சாதாரண தரத்தில் இரண்டு ப்ளாட்டுக்களை வாங்கக்கூடிய அளவிற்கு உங்களிடம் பணம் இருந்தால், ப்ளாட் வடிவில் ஒரு மினி பங்களாவையே புஷ்கர் நிறுவனம் நகரின் இதயப் பகுதியில் தருகிறது. எனது புராஜெக்ட் ஒவ்வொன்றும் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இணையானது. அதனால்தான் புஷ்கரின் புராஜெக்டுகள் அறிவிப்பு அளவிலேயோ அல்லது சைட்டில் விளம்பரப் பலகை வைக்கும் நிலையிலேயோ அனைத்து வீடுகளும் விற்றுவிடுகின்றன. எனவேதான், நெருக்கடியான சூழ்நிலையிலும் எங்களால் நிலைத்து நிற்க முடிகிறது.

நாங்கள் இதுவரை 80 புராஜெக்டுகளை முடித்திருக்கிறோம். 500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளரின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஏறக்குறைய அனைவருடைய பெயர்களையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர் விவரங்களும் எனக்குத் தெரியும். பில்டர், வாடிக்கையாளர் என்கிற உறவினைத் தாண்டி என்னை ஒரு குடும்ப நண்பராகவே என்னை அங்கீகரித்திருக்கிறார்கள். எனது புதிய புராஜெக்டின் விவரம் தெரிந்து அதனை தங்கள் நண்பர்கள், உறவுகளுக்குத் தெரிய படுத்தி புராஜெக்ட் எளிதாக விற்க உதவி செய்கிறார்கள்.

டவுன்ஷிப் அல்லது பன்னடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டுகிற பில்டராக நான் இருந்தால் 
இது போன்ற தனிப்பட்ட வியாபார நிறைவு கிடைப்பது சந்தேகம்தான். ஏனெனில், நான் க்வான்டிடியை விரும்புவது கிடையாது. க்வாலிட்டிதான் எப்போதுமே நம்மைக் காப்பாற்றும் என்பதில் உறுதியானவன் நான்.”

புஷ்கர் நிறுவனத்தின் வெற்றிக்கு சொந்தமாக வேறு யார்யாரை எல்லாம் குறிப்பிடுவீர்கள்?
“முதலில் எனது குரு, ஆசான், வழிகாட்டி சைதன்யா ஹோம்ஸ் நிறுவனர் திரு.ரமேஷ் ரெட்டி அங்கிளைச் சொல்வேன். அவர்தான் எனக்கு நிர்வாகத்தையும், மனித வள மேலாண்மையும், எல்லாவற்றிற்கும் மேலாக வாடிக்கையாளருடனான நல்லுணர்வையும் எனக்கு போதித்தார். அதற்குப் பிறகு எனது நிறுவனத்தின் அதிகாரிகளையும் ஊழியர்களையும்தான் குறிப்பிடுவேன். எனது குடும்பத்தினருடன் அளவளாவும் போது உண்டாகும் அதே பரிவு, பாசம் எனது தொழிலாளர்களுடன் பணிபுரியும்போது எனக்கு உண்டாகிறது. நான் இவ்வளவு நேரம் உங்களிடம் இடையூறு இன்றி பேச முடிகிறது என்றால், அவர்கள் பணிகளை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

புஷ்கர் நிறுவனத்தின்தொடர்ச்சியான வெற்றி என்பது எத்தனை முக்கியமோ, அதே அளவு அக்கறை நான் ஒவ்வொரு ஊழியர்கள் மீதும் வைத்திருக்கிறேன். அவர்களது கல்வி நிலை, வாழ்வியல் நிலை, பொருளாதார நிலை, போன்றவை உயர வேண்டும் என்பதில் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் உண்டு. அதேபோன்று அவர்களும் அவர்களுடைய உச்சக்கட்ட ஒத்துழைப்பை நிறுவனத்தின் வெற்றிக்கு தொடர்ச்சியாகதந்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதை விலைகொடுத்து வாங்க முடியாத விக்ஷயமாகும். அது எனக்கு கிடைத்திருப்பது என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

வருடத்திற்கு 5 புராஜெக்ட், என்னுடைய 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களுடன் ஆண்டிற்கு ஒருமுறை வெளியூர் பயணம் இதுதான் எனது வாழ்வியல் வட்டம். இது, குறுகியதாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், எனக்கு நிறைவாக இருக்கிறது. அதுதான் முக்கியம்.” என்றார் கீர்த்திவாஸ்.

ஒரு வெற்றிகரமான கட்டுநரிடம் உரையாடிய மகிழ்வு மட்டுமன்றி மனித வள மேலாண்மையில் கரைகண்ட மனிதநேயமிக்கவருடன் உரையாடிய மகிழ்வும் நமக்கு உண்டானது.

சென்னையின் மிகமுக்கிய பகுதிகளில் உருவாகி வரும் புஷ்கர் நிறுனத்தின் லக்சரி புராஜெக்டுகள் பற்றி அறிய :

M/s. PUSHKAR PROPERTIES P. LTD
1A, F Block, 51/3, 2nd Main Road, Anna Nagar East, Chennai - 102
Mb : 98843 97640 Ph : 044 43410800
www.pushkarproperties.in
----------------------------------------------------------------------------------------
From Builders line Monthly
Visit us : www.buildersline.in







உங்கள் ஊருக்கு நேரில் வருகிறது..
பில்டர்ஸ் லைன் & பிராம்ப்ட் பதிப்பகம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜூலை மாத்தில் , நெய்வேலி, ஈரோடு, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் , ஆகஸ்ட் மாதத்தில்  மதுரையிலும் பில்டர்ஸ்லைன் மற்றும் பிராம்ப்ட் பதிப்பகம் கலந்து கொள்கிறது.



வீடு, ரியல் எஸ்டேட் , இன்டிரியர், வீட்டு பராமரிப்பு, கட்டிடப் பொறியியல் குறித்த நூல்கள்

கட்டிட முகப்பு (எலிவேஷன்) , வரைபடங்கள் ( பிளான்) , இண்டிரியர் மாடல்கள் அடங்கிய சிடிக்கள்  

தமிழ்நாடு கட்டிடத்துறை முகவரி அடங்கிய சிடிக்கள்

பில்டர்ஸ் லைன் தமிழ் மற்றும் ஆங்கிலம் மாத இதழ்களுக்கான சந்தா அனைத்தும் ஒரே இடத்தில்.....



கண்காட்சி       : நெய்வேலி புத்தக கண்காட்சி
இடம்                :  நெய்வேலி வளாகம்
தேதி                 :  ஜூலை  3 முதல் 12 வரை 
தொடர்பு நபர்  :  திரு. தாசபிரகாஷ்
தொடர்பு எண் :  9941 414011

-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        :  நெல்லை புத்தக கண்காட்சி
இடம்                 : நெல்லை
தேதி                  : ஜூலை  19 முதல் 30  வரை 
தொடர்பு நபர்   திரு. சண்முகம்
தொடர்பு எண்  :  88254 79234


-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        : ஈரோடு புத்தக கண்காட்சி
இடம்                 : ஈரோடு 
தேதி                  : ஜூலை  31 முதல் ஆகஸ்ட்  1  வரை தொடர்பு நபர்   திரு. சண்முகம்தொடர்பு எண்  :  88254 79234



-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        :  மதுரை புத்தக கண்காட்சி
இடம்                 : மதுரை
தேதி                  : ஆகஸ்ட்  30 முதல் செப்டம்பர் 10  வரை 
தொடர்பு நபர்   திரு. தாசபிரகாஷ்

தொடர்பு எண்  :  9941 414011

-------------------------------------------------------------------------------------------------------------